Thursday, December 20, 2012

சந்தேகம்


Thanks by http://www.readislam.net

சந்தேகம் சந்தேகம் சந்தேகம்……

Post image for சந்தேகம் சந்தேகம் சந்தேகம்……
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப்பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம்பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால்அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப்பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல்விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”
வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
abdul ahadh

Thursday, December 13, 2012

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்



Steve Jobs
அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால்,
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர்.
இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர்.
உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார்.
அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்க்கலாம் ?
முதல் நிகழ்வு/பாடம்:
17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப் பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி இருந்தது.
பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம் அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும் பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.
கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும், கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத் தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy)வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.
அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல் மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது. அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர் எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய எழுத்து வகைகள் தான் உதவியது.
மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப் படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.
மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும் பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.
(படிக்கிற படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில் அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர் சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)
இரண்டாம் நிகழ்வு/பாடம்
தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய் மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால் அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில் இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன் திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர் அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக டாய்ஸ் ஸ்டோரி என்ற ’கம்ப்யூட்டர் அனிமேஷன்’ திரைப்படம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.
ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.
ஆப்பிளில் இருந்து முதல் முறை வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில் இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான் காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.
மாற்றங்களும், இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும் கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை. அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம் என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.
மூன்றாவது நிகழ்வு/பாடம்
2004 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே.
தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்” என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து விடும்”. அதன் பின் ஒவ்வொரு நாள் காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும் வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.
மரணம் அருகில் இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும் சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம்.
மரணம் நிச்சயமானது, வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து அமைதியாக உயிர் விட்டார்.)
வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள்தனம்.
மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும், வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே!
நன்றி : சகோதரர்  என்.கணேசன்.&
 

கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்


கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்
[சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின் கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.]
கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்:
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைக்கு ஒரு பெண்மணி வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சக்களத்தி இருக்கிறாள். அவளை எரிச்சல் ஊட்டி கோபப்படுத்த வேண்டும். அதற்காக என் கணவர் எனக்குக் கொடுக்காத ஒரு பொருளை என் கணவர் எனக்குக் கொடுத்தார் என பொய் சொல்லட்டுமா? இது பாவமா?’ என்று கேட்டார்.
இதைக்பேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஒருவர் ஒரு பொருளை கொடுக்காத நிலையில் அவர் அதைக் கொடுத்தார் என்று சொல்வது மோசடியான உடையை அணிந்து கொள்வதற்குச் சமமாகும் (அது ஒரு மோசடிச் செயலாகும்).’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், நஸஈ, அபூதாவூத்)
ஒருவரை ஒருவர் ஏமாற்றம் அடையச் செய்வதற்கோ கோபம் அடையச் செய்வதற்கோ பொய்யை ஆயுதமாகக் கொள்ளக் கூடாது. மேலும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட இரு மனைவிகளுக்கிடையே கோப உணர்வு நடமாடக்கூடாது. இருவர் மனதிலும் கோபக்கனலின் பொறி கூடச் சிதறக் கூடாது என்பதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
வெளிப்படையில் நல்லது போன்றும் நன்மை போன்றும், உள் நிலையில் கெட்டதாகவும் தீயதாகவும் இருக்கும் சொல், செயல், நினைப்பு அனைத்துமே மோசடியானது தான். இந்த மோசடி, குடும்பங்களுக்கு மத்தியில் குடிபுகுந்து விடக் கூடாது. பெண்களுக்கு நடுவே விளையாட்டுக்குக் கூட ஏமாற்றமான பேச்சுவார்த்தைகள் வெளியாகக் கூடாது. அது ஒருசமயம் சாதாரண விஷயமாகவும், சிலசமயம் பயங்கர விஷயமாகவும் ஆகிவிடும்.
நகைச்சுவைக்காக சின்ன விஷயங்களில் பொய் சொல்லிவிட்டு அது பொய் என்று தெரிந்த பிறகு அந்தப் பெண் மீதுஇருக்கும் அன்பும் நம்பிக்கையும் பாதிக்கப்படும். பிறகு ஏதாவது ஒரு விஷயத்தில் உண்மை சொல்லும் நேரத்திலும் ஒரு செய்தியை நிலைநாட்டத் துடிக்கும்போதும் தோற்றுப்போகும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நேரத்தில் எந்த முகாந்தரமும் எடுபடாது போய்விடும்.
‘நெருப்பு விரகைத் தின்று விடுவதுபோல பொய் பேசுவது இறைநம்பிக்கை எனும் ஈமானைத் தின்றுவிடும்.’ என அறிவுறுத்தப்படுகிறது.
‘பொய் சொன்னால் போஜனம் கிட்டாது’ என்று நாட்டுவழக்கில் சொல்வார்கள். இத்தனை மோசமான ஒரு செயலை இரு பெண்களுக்கு மத்தியில் செயல்படுத்த விடக்கூடாது. பெண்கள் வாழ்வில் எத்தனையே உண்மைகள் கூட செத்துப்போய் விடுகின்றன. சந்தேகப் புயல்களால் உண்மை சாய்ந்துவிடுகிறது. சத்தியங்கள் தோற்றுப்போய் விடுகின்றன.
அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தபோதும் கூட அவர்களை திருப்தி படுத்துவதற்காக பொய்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டதில்லை. உண்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்த காரணத்தால் தான் அத்தனை வாழ்க்கைத் துணைவிகளையும் எளிமை நிலையிலும் செழிப்பான நினைவுகளுடன் வாழச்செய்ய முடிந்தது.
அல்குர்ஆன் எச்சரிக்கிறது :
ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியைத் தனது தேவைக்காகக் கட்டிக்கொள்ள முனையும் ஆண்மகன் அவர்கள் நடுவே நீதத்துடன் நடக்க வேண்டும். அப்படி நீதத்துடன் நடக்க முடியாது என்ற பயம் இருந்தால் அவன் ஒரு பெண்ணை மட்டுமே மணந்துகொள்வது போதும் என்று இறைவேதம் எச்சரிக்கின்றது.
இரண்டு ‘பெண் உணர்வுகள்’ ஒன்றை ஒன்று மோதிக் குடும்பங்களில் குழப்பத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் விழிப்பாக உள்ளது. அதனால் தான் ஒன்றுக்கும் மேல் இன்னொரு பெண்ணை மணமுடிக்கும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்பட்டாலும் முன்பு மணமுடித்திருக்கும் மனைவியின் உடன்பிறந்த சகோதரியைத் திருமணம் முடிக்க தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதாவது அக்கா தங்கையான உடன்பிறப்பை ஒரே மனிதன் மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது.
தங்கத்தை கூடத் தியாகம் செய்து தாரை வார்த்துக் கொடுக்கும் தங்க குணம் கொண்ட நமது தாய்க்குலத்திற்கு தாம்பத்ய வாழ்வை மட்டும் பங்களிக்கும் நிலையைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் மன உணர்வு பாதிக்கப்பட்டு பழி பகை என்று பலவித பாதகங்கள் விளைந்து விடுகின்றன.
எந்த நிலையிலும் ஒரு கணவனின் கண்ணியம் சிதைந்து போய்விடக் கூடாது என்பதில் மனைவி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கணவனின் மானத்தை மறைக்கும் ஆடையல்லவா மனைவி! கணவனின் மானத்தை மறைக்கும் ஆடைபோல மனைவியும், மனைவியின் மானத்தை மறைக்கும் ஆடை போலக் கணவனும் இணைந்து செயல்பட்டால் குடும்ப கவுரவம் என்றுமே நிமிர்ந்து நிற்கும்.
பொடுபோக்கு மனைவி :
சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறிக் கணவன் மனதை கசக்கிப் பிழியும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
‘கணவன் சம்பாத்தியம் போதவில்லை’ என்று பொய் கூறினால் யார் கொடுத்து ஈடுகட்டத் துணிவார்கள்? கொடுக்க நினைக்கும் உறவு முறை கூட கேவலமாக நினைக்க மாட்டார்களா?
‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற நிலையில் கணவனின் சம்பளம் குறைவாக இருந்தாலும் நிறைவான மனதுடன் அதைக்கொண்டு குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு அதில் அதிகமான பரக்கத் – அபிவிருத்தியை அல்லாஹ் கொடுப்பான் அல்லவா? இது தன்னைக் கட்டிய கணவருக்குக் கண்ணியம் சேர்க்கும் அணிகலன் என்பதை பெண்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
சில குடும்பங்களில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கணவனுக்கு அடங்காப்பிடாரித் தனமான மனைவிகள் வந்து அந்த கணவனின் கண்ணியத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். கட்டிய மனைவியின் அட்டகாசமான பேச்சும் ஆடம்பரமான வாழ்வும், பெருமையான போக்கும், பண்பு தவறிய நடத்தையும் கண்ணியமான கணவனையும் தலைகுனியச் செய்துவிடுகிறது.
ஊரில் பெருமையான குடும்பத்தில் உள்ள கணவன், கட்டி வந்த பெண்ணால் சிறுமைப்பட நேரிடுகிறது. கச்சிதமான குடும்பத்தில் ஆடம்பரமான மருமகள் வந்து அனைத்தையும் சீரழித்துவிடும்படி ஆகிவிடுகிறது. ஒற்றுமை மிகுந்த குடும்பத்தில் உதவாக்கரையான பெண் வந்து அனைவரையும் அக்கு வேறு ஆணி சேராகக் கழற்றி விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
சில குடும்பத்தில் இப்படிப்பட்ட பெண்கள் நுழைந்து ஆட்டம் போட்டு, ஆடமட்டும் ஆடி, பாடமட்டும் பாடி, ஓடி ஆடி ஓய்ந்த பின்பு, அன்பு பண்பு பாசம் அனைத்தையும் இழந்துவிட்டு ஒதுக்கப்பட் குப்பைகள் போல கேட்பாரற்று ஆகிவிடுகிறார்கள். பின்னால் யோசித்துப் பிரயோசனம் இல்லாமல் போய்விடுகிறது.
நல்ல மருமகள் :
சில குடும்பங்களுக்கு மருமகளாகப் புகுந்து வரும் பெண்கள் மருமகள் எனும் நிலையைவிட அந்த வீட்டின் மகளாகவே வாழ்ந்து காட்டுகிறார்கள். மாமியாரையும், மாமனாரையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் பெற்றெடுத்த தாய் தந்தையாகவே போற்றி மகிழ்கிறார்கள். கணவனுடன் பிறந்த நாத்தனார், கொழுந்தனார்களைத் தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளாகவே மதித்துப் பணிவிடை செய்து நற்பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருமக்கமார்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்குகிறார்கள். இப்படிப்பட்ட மருமகள்கள் வாழ்கின்ற வீடு சொர்க்கமாக இருக்கும்.
சில எளிமை மிக்கக் குடும்பத்தில் வாழ வந்த மருமகள் கூட ஏதேனும் கைத்தொழில் செய்து தன் கணவனின் கண்ணியம் காத்து மகிழ்கிறார்கள். சிலர் பலகாரங்கள் செய்து குடும்பச் செலவுக்கு ஈடுகட்டுகிறார்கள். சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்து கணவன் சுமையைக் குறைக்கிறார்கள். கிராமப்புற மருமக்கள் கூட கோழி வளர்த்து குடும்பச் செலவை சரிசெய்து கொள்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சுமையாக நினைப்பதில்லை. சுவையான வாழ்வாகவே நினைக்கிறார்கள்.
குடும்பக் கண்ணியத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களுக்கு இறைவன் என்றுமே துணை இருப்பான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். கணவனும் மதிப்பார். கணவனைப் பெற்றெடுத்த மாமனாரும், மாமியாரும் மதிப்பார்கள். உற்றார் உறவினர்களும் மதிப்பார்கள்.
பெண்களாகிய நமது சகோதரிகள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனின் கண்ணியத்தையும் குடும்பத்தின கவுரவத்தையும் பாதுகாக்கும் பெண்ணுக்கு இயற்கையாகவே இறைவன் தனி மதிப்பைக் கொடுப்பான். கணவனின் கண்ணியத்தைக் கெடுத்து குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுத்துவரும் பெண்ணுக்கு அவளை அறியாமலேயே அவள் பின்னால் இழிவு எழுந்து நிற்கும்.
குடும்பப் பெண்கள் இதை உணரந்து ஒவ்வொரு நாளும் கடமை உணர்வுடன் நடந்தால் கண்ணியம் அவர்கள் காலடியில் வந்து விழும். இது குடும்ப வாழ்வில் நாம் காணும் உண்மை.
   
முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் | nidur.info

பலவீனத்தைப் பந்தாடு (சுயமுன்னேற்ற கட்டுரை) – வெ.இறையன்பு I.A.S.



"மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி"
“மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி”
ஒண்டிக்கு ஒண்டி மோதுவதாக இருந்தாலும், ஊருடன் ஊர் மோதுவதாக இருந்தாலும் சரி, பலவீனமான பகுதி எது எனத் தெரிந்து அதைத் தாக்குவதுதான் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி.
மிகவும் பலசாலியாக இருக்கிறவனுக்கும் ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும். அதை அறிவதுதான் யுத்தத்திற்கான முதல்படி. அது தெரியாதவரை எதிரியை எதுவும் செய்ய முடியாது.
ஸ்டிக்ஸ் நதியில் நனையாமல் போன அக்கிலஸின் குதிகால் மட்டும் பலவீனமானது என்கிற நுண்ணிய தகவலை ஹெலன் மூலம் தெரிந்துகொண்ட பாரிஸ், அதை நோக்கி அம்பு செலுத்தி வீழ்த்துகிறான். கிரேக்கப்படைகள் அக்கிலஸை இழந்து தவிக்கின்றன.
துரியோதனனுக்கு காந்தாரி கண் கட்டவிழ்த்தபோது உள்ளாடை உடுத்தியிருந்த தொடைப்பகுதி மட்டும் பலவீனமாக இருக்கிறது. அதை இறுதி யுத்தத்தில் கிருஷ்ணர் சமிக்ஞையின் மூலம் உணர்த்த பீமன், யுத்தநெறிகளைத் தாண்டி அவன் தொடையை கதையால் தாக்கிக் கொல்கிறான்.
மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏதேனும் ஒரு வகையில் பலவீனமற்ற மனிதன் அரிது.
சர்வதேசப் பயங்கரவாதம் என்பது எதிரியின் பலவீனத்தைக் குறிவைத்து இயங்குகிற கருத்தாக்கம். அது கொரில்லாத் தாக்குதலின் அடிப்படையிலே அமைந்த தந்திரம். ஆனால், இரண்டுக்குமான அடிப்படைவேறுபாடு ஒன்று உண்டு. பயங்கரவாதம் என்பது அந்நிய மண்ணில் நடக்கும் தாக்குதல். கொரில்லாத் தாக்குதல் சொந்த மண்ணில் நடப்பது. சர்வதேசப் பயங்கரவாதம் தாக்குதலையும், கொரில்லா யுத்தம் தற்காப்பையும் அடிப்படையாகக் கொண்டது.
பலவீனத்தை மையமாக்கி நடத்தும் போர் ஒழுங்கற்ற போர்முறை (Irregular Warfare). உலகளவில் எதிரியின் பலவீனத்தைத் தாக்கி, கடுமையான சேதத்தை விளைவித்து குறிக்கோளையடைந்ததற்கு மிகப்பெரிய சான்று, மாசேதுங் நடத்திய கொரில்லாப் போர். கொரில்லாப்போர் என்பது 4,500 ஆண்டுகள் பழைமையானதுதான். ஆரம்பக் கட்டங்களில் நாடோடியாகத் திரிந்தபோதும், நாகரிக வாழ்வைத் தொடங்கியபோதும் சரித்திரத்திற்கு முற்பட்ட நிகழ்வுகளிலும் இப்படிப்பட்ட போரே நிகழ்ந்தது. பழங்கால சுமேரிய, எகிப்திய நாகரிகங்களின்போது நடந்த போர்களும் இத்தன்மையதே.
கொரில்லா யுத்தம் ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி போன்ற வீரப்புருஷர்களால் கையாளப்பட்ட நெறியென்றாலும் அதற்கு அறிவார்ந்த அடிப்படையையும், கருத்தாக்கத்தையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தவர் மாவோதான். அவர், ‘சன்-சூ’ போர்க்கலைப் புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்துக் கருத்துகளையும் நெசவு செய்து அணுகுமுறையை வடிவமைத்தார். அது எம்மாதிரியான மோதலுக்கும் பொருந்தும் என்றும், எல்லாப் போர்களுக்கும் ஏற்றது என்றும் அவர் நிரூபித்துக்காட்டினார்.
மாவோவின் முதல் நோக்கம் நேரடியான, சிறுசிறு தாக்குதல்களை எதிரிகளின் நகரம், தடவாளம், கிடங்கு, தகவல்தொடர்புச் சங்கிலி ஆகியவற்றின்மீது அடிக்கடி நிகழ்த்துவது. தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பாராத நேரங்களில் நடக்கும். எதிரி தன்னுடைய பலத்தைப் பரவலாக்கி, முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் அவை வலுவற்றுதான் இருக்கும். ஏனென்றால், எந்தப் பகுதியை மாவோவின் படை தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதிரியைக் குழப்பமடையச் செய்வதும், எப்போதும் பதற்றத்திலும், பயத்திலும், பாதுகாப்பின்மையிலும் தவிக்கும்படி செய்ய வேண்டும். அவர்கள் முற்றிலுமாக உற்சாகம் குறைய, காற்றுப்போன பந்து மாதிரியாகி விடுவார்கள். அது எதிரியின் பலத்தை நிர்மூலமாக்கிவிடும்.
பாரம்பரிய ராணுவ நெறியை மேற்கொள்ளாததால், எதிரியை நாடு முழுக்க அலைய வைக்க நேரிடும். எனவே, எந்தப்பக்கமும் எதிரியின் பின்புறமாகிவிடும். எனவே, கொரில்லா வீரர்கள் மக்களையே உணவு, உடை போன்றவற்றிற்கும் எதிரியின் நடமாட்டம் பற்றிய நுண்ணறிவுக்கும் நம்ப வேண்டியிருக்கும். விவசாயிகளின் ஒத்துழைப்பைப் பெறும் பொருட்டு, பெரிய நிலச்சுவான்தார்களின் தோட்டங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏழை விவசாயிகளுக்கு அவர் பிரித்துக் கொடுத்தார்.
மாவோ வேகமாகவும், மின்னலைப்போலவும் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்து, விரைவில் மறைந்துவிடும் உத்தியை கொரில்லா வீரர்களுக்குப் பயிற்றுவித்தார். இருபது ஆண்டுகள் பயிற்சி; போராட்டமே பயிற்சியானது. ராணுவமோ நாட்டின் முக்கியமான பகுதிகளைக் காப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டது. கொரில்லாக்கள் அவர்களுக்கு உணவு வரும் வழிகளையெல்லாம் தடுத்து நிறுத்தினர். எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்கிற பயமே அவர்களை செயலிழக்கச் செய்தது.கொரில்லாவிற்கு எப்போதும் சாதகமான சூழல். அவர்கள் எந்த இடத்தைத் தாக்குவது என சுயமாகத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
தொடக்கத்தில் மாவோவுக்கு வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. சீனாவின் அதிபராக இருந்த ஹியாங் கேஷி, வெறிபிடித்துப்போய் ஏழு லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அனுப்ப… மாவோ உருவாக்கிய சிவப்பு ராணுவம் தப்பி ஓடியது. ஓராண்டு தொடர்ந்து ஓட்டம். ஆறாயிரம் பேர் மட்டுமே தப்ப, ஓட்டத்தில் மாசேதுங்கின் தம்பியும், குழந்தைகளும் கூட பலியானார்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானோடு போரிட்டுப் போரிட்டுக் களைத்துப் போயிருந்த ஹியாங் கேஷியின் ராணுவத்தை நோக்கி சிவப்பு ராணுவம் அடிமேல் அடி வைத்துத் தாக்கியது. சீனாவின் ராணுவம் புறமுதுகு காட்டி ஓடியது. ஹியாங்கே, தாய்வான் தீவுக்குத் தப்பி ஓடினான்.
எதிரிகளின் பலவீனத்தைப் பந்தாடிய இன்னொரு வரலாற்றுச் சம்பவம் 1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப்போர். போர் நுணுக்கம் அறிந்தவர்கள் அதைப் ‘பாலைவனப் புயல்’ என்றே சிலாகிக்கிறார்கள்.
ஈராக் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று குவைத்தை ஆக்கிரமித்தது. விமானம் மூலமாகவும், தரைவழியாகவும் 1,50,000 ஈராக் சிப்பாய்கள் அதிரடியாக நுழைந்து, குவைத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ஈராக் அதிபர் சதாம் உசேன் ஈரானோடு எட்டு ஆண்டுகள் நடத்திய கடுமையான யுத்தம் பலவகைகளில் அவருடைய நாட்டுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திவிட்டது.
அவர், குவைத் போன்ற இதர வளைகுடா நாடுகளுக்குப் பெருமளவில் கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். குவைத்தைக் கையகப்படுத்தி அதை ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக அறிவிப்பதன் மூலம் அந்நாட்டுக்குச் செலுத்தவேண்டிய கடன் தொல்லையில் இருந்து மீள்வதுடன் குவைத்தின் வளமான எண்ணெய்க் கிணறுகளின் மூலமாக மற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய கடனைச் சமாளித்துவிடலாம் என்பதுதான் அவருடைய திட்டம். இதனை அமெரிக்கா உட்பட 33 உலக நாடுகளின் கூட்டணி கடுமையாக எதிர்த்தது.
ஐந்து மாதங்கள் கழித்து ஈராக்கியத் துருப்புகளின் மீது விமானத் தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈராக் அதைச் சமாளிக்க, ஐந்து லட்சம் துருப்புகளை குவைத்தில் குவித்தது. தரை மூலமாக தாக்குதல் நடத்தினால்தான் சமாளிக்க முடியும் என்கிற நிலைமை உருவானது. பல பத்திரிகைகள் குவைத்தை மறுபடி மீட்பதற்கு ஒருவாரம் தேவைப்படும் என்றும், 20,000 அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழக்க நேரிடும் என்று அனுமானித்து எழுதின. ஈராக்கியத் துருப்புகளோ பாதுகாப்பான இடங்களைப் பிடித்து, தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகியது.
ஈராக் ஐந்து மாதங்களுக்கு முன்பே உள்ளே நுழைந்து தங்களைப் பலப்படுத்திக்கொண்டு, சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொண்டார்கள். அது முதலாம் உலகப்போரை நினைவுபடுத்துகிறது என்றெல்லாம் எழுதினார்கள். ஈராக் அப்போதும் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சிப்பாய்களையும், நாலாயிரம் டாங்கிகளையும், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களையும் நிறுத்தி வைத்திருந்தது. சிப்பாய்களோ எடுத்துச்செல்லக்கூடிய கான்கிரீட் பாதுகாப்புக் கூரைகளுக்கு அடியில் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் குவித்து வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அரண்வகுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, ‘டைம்’ இதழ் போரைப்பற்றிக் கணித்துச் சொன்னது.
போர் விமர்சகர்கள் அமெரிக்கத் தளபதி நார்மன் ஷ்வார்ஜ்காஃப் வைத்திருந்த உத்தியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவருடைய கமாண்டர்கள் குவைத்தை நேரடியாகத் தாக்கினால் இரண்டாயிரம் பேர் இறப்பார்கள், எட்டாயிரம் பேர் காயமடைவார்கள் என்று திட்டத்தை வகுத்துக்கொடுத்தனர். ஆனால், அதை அவர் நிராகரித்தார். விமானத்தின் மூலமாக குண்டுமழை பொழிந்து, ஈராக்கின் பலத்தைப் பாதியாகக் குறைப்பது என்றும் ‘இடது கொக்கி’ மூலமாக ரகசியத் தாக்குதல் நடத்துவது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உலகத்தின் ஒட்டுமொத்தக் கவனமும் குவைத்தின் தெற்குப்பக்கம் அமெரிக்கத் துருப்புகள் வருவதைக் கண்காணித்துக்கொண்டிருக்கும்போது ரகசியமாக 2,50,000 சிப்பாய்களை குவைத்தின் மேற்குப் பக்கம் மெதுவாக ஊடுருவச் செய்து, அங்கிருந்து வலது பக்கத்திற்குச் சென்று, காலியாக இருக்கும் தெற்கு ஈராக்கில் பாலைவனப்பகுதிகளை வசப்படுத்துவது என்று முடிவானது.
தரைவழியான தாக்குதல் தொடங்கியதும் இந்தப் படை வடக்கு நோக்கி நகர்ந்து, கிழக்குப் பக்கம் திரும்பி, இடது கொக்கியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் ஈராக்கின் பாதுகாப்புச் சப்பையை அடித்து நொறுக்க வேண்டும். அந்தத் திட்டத்தின்படி அமெரிக்க கடற்படை, குவைத்தின் வடக்குநோக்கி மெதுவாக நகரத் தொடங்கின. இது உண்மையிலேயே தாக்குதலுக்காக அல்ல, ஈராக்கின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக.
ஷ்வார்ஜ்காஃப்பின் உத்தி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. தரைப் படைத் தாக்குதல் நூறு மணி நேரத்தில் முடிந்துபோனது. ஒரு மாத காலம் விமானத் தாக்குதல் நடத்தியதன்மூலம் ஒரே இடத்தில் குவிந்திருந்த ஈராக்கியத் துருப்புகள் பரவலாகச் சிதறவும் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல் செய்யவும் வழிவகுத்தன.
அவர்கள் தங்கள் பீரங்கிகளையும், டாங்கிகளையும் விட்டு விலகியிருக்கவும் செய்தன. விரைவாகவும், ஆக்ரோஷத்துடனும் டாங்கிகள், காலாட்படை, ஹெலிகாப்டர்கள், குண்டுபொழியும் விமானங்கள் ஆகியவற்றின்மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருந்தது. ஈராக்கிய சிப்பாய்கள் துணிவோடு போராடினார்கள். ஆனால், அவர்களால் வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் ஏற்றவாறு உபரிப்படையை நகர்த்தி சமாளிக்க முடியவில்லை.
அமெரிக்க கப்பற் படையினரோ ரசாயன ஆயுதங்களை ஈராக் பயன்படுத்தினால், இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதைப் பயன்படுத்த சதாம் உசேன் ஆணை வழங்கவில்லை.
வேறுவழியின்றி பெரும்பான்மையான படைகள் சிதற… குவைத்தைவிட்டு ஈராக் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது. அமெரிக்க சார்புடைய படைகளின் இழப்போ மிகவும் குறைவாக இருந்தது. ஷ்வார்ஜ்காஃப் முக்கியமான தாக்குதல், கடலின் வழியாக நடப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார். அதை எதிர்பார்த்து ஈராக் காத்திருந்தபோது, அதன் பலவீனமான பகுதியை கடுமையாகத் தாக்கினார்.
அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகளும், குவைத்தின் தெற்குப் பக்கம் அமெரிக்கத் துருப்புகள் குவிக்கப்படுவதைப்போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின. பெரும்பான்மையான அமெரிக்கக் கமாண்டர்களுக்கு இது தெரியாது. சாதுர்யமாக ஈராக்கின் பலவீனத்தை நோக்கி அவர் நகர்த்தியதால், அமெரிக்கத் துருப்புகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் சொற்பமாக இருந்தது.
வாழ்விலும் நிர்வாகத்திலும் எதிரியின் பலவீனத்தை நோக்கியே நாம் காய் நகர்த்த வேண்டும். சிலர் புகழையே தங்கள் பலமாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதை நோக்கி குறிவைத்தால் ஆடிப்போய்விடுவார்கள். அதற்கு எந்தக் களங்கமும் விளையக்கூடாது என்பதற்காக எதையும் பறிகொடுக்கத் தயாராக இருப்பார்கள். பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பலவீனமில்லாத வாழ்க்கையை வாழ்வது எப்போதுமே பாதுகாப்பானது. ஆனால், அதற்கு எளிமையும் நேர்மையும் அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றைக் கையாளுவது சிரமமல்ல. ஆனால், நிருவாகம் என்பது எண்ணற்றோருடைய கூட்டமைப்பு. அதில் எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயம் பலவீனம் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை உணர்ந்து, அந்தப் பகுதியைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
இரண்டு நிறுவனங்கள் ஒரே வாடிக்கையாளர்களைக் கவரும் போட்டியில் ஈடுபடும்போது மற்ற நிறுவனத்தில் எது பலவீனமானது என்பதைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வீழ்த்துகிறவர்கள்கூட அவற்றின் எந்தப் பகுதியை அடித்தால் உடனே உயிர் போகும், அதிகச் சித்திரவதை இல்லாமல் அவை உயிரிழக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான் தங்கள் அசைவை முன்நிறுத்துகிறார்கள்.
வர்த்தகத்தில் எதிராளியின் பொருளில் எது குறைபாடு என்பதைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் வகையில் ஆய்வை நடத்தி, தங்கள் நிறுவனத்தின் பொருளை மேம்படுத்துபவர்கள் விரைவில் சந்தையைப் பிடித்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட்டில்கூட மிக நல்ல நிலம் போவதற்கு வழியில்லாமல் நடுவில் மாட்டிக்கொண்டால், அடிமாட்டு விலைக்கு விற்க நேர்வதைப் பார்க்கலாம். தொடர்ந்து தன்னைப் பலப்படுத்திக்கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.
தலைசிறந்த நிர்வாகியாக இருக்கிறவர் பேச்சில், எழுத்தில், கூட்டங்களை நடத்துவதில், உடலசைவு மொழியில், உடைகளை உடுத்துவதில், கம்பீரமாக நடப்பதில், மிடுக்காக நடந்துகொள்வதில் தன்னை அச்சு அசலாக வெற்றிபெற்றவர்களைப்போல காட்டிக்கொள்ள முனையும்போது எதிராளிக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. வெகு எளிதில் அவனால் கவர்ச்சி ஒளிவட்டத்தை உண்டுபண்ணிவிட முடிகிறது.
அதற்குப் பிறகு அவன் கீழ் பணிபுரிபவர்கள் அவன் சொன்னதற்கெல்லாம் சொக்குப்பொடி போட்டதைப்போல மயங்கிவிடுகிறார்கள். சிலருக்கு பெரிய விஷயங்களில் பலவீனம் இருக்காது. ஆனால், சின்னவற்றில் பலவீனம் இருக்கும். தன்னுடைய பலவீனத்தை நண்பர்களிடமிருந்து கேட்டறிவதும், அவற்றைக் கவனமாக தவிர்க்க முயல்வதும் உறுதியான பலன்களை அளிக்கும். அப்போது வீழ்த்த முடியாத மனிதனாக வீறுகொண்டு எழலாம். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவர்கள் எந்த நேரத்திலும் நிமிர்ந்து நிற்கிறார்கள்.
நன்றி  - புதிய தலைமுறை வாரஇதழ்
 

Friday, November 9, 2012

தோட்டக்கலை :: நறுமணப் பர்கள் :: புதினா


gg English Version

இரகங்கள்
ஜப்பான் புதினா     -     எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911
ஸ்பியர்                  -     எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1
பெர்கோ            -     சிரன்
மிளகு              -     குக்ரைல்
மண் மற்றும்  தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும். 
விதை மற்றும் விதைப்பு
வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும். பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும்  சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு  செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை  பிரித்து இடவேண்டும்.
நீர் நிர்வாகம்
பின்செய்நேர்த்தி
தேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.
அறுவடை
நடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.
மகசூல்
இலைப்பாகம் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்
எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்

THANK S BY  http://agritech.tnau.ac.in

வேளாண் பொருள் பதனிடுதல் - தொடர்புடைய இணையதளங்கள்


நிறுவனத்தின் பெயர்
இணையதள முகவரி
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரம் (APEDA)
http://www.apeda.com
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்
http://www.cftri.com
மத்திய மீன் உற்பத்தி தொழில்நுட்ப நிலையம் (CIFT)
http://www.cift.res.in
அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம்
http://www.tnau.ac.in/aecricbe/phtc
மத்திய மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்
http://cpcri.nic.in
உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம்
http://www.mylibnet.org/dfrl.html
இந்தியர் வணிகர் சங்கம் மற்றும் தொழில் இணையம்
http://www.ficci.com/index.htm
உணவு மதிப்பிடுதல் தொழில் அமைச்சகம்
http://mofpi.nic.in/
இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில் நுட்ப நிலையம்
http://pprc.gov.in/
வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
http://www.tnau.ac.in/aecricbe
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
http://www.nrcb.tn.nic.in
தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையம்.
http://www.ndri.res.in
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம்.
http://www.iisr.nic.in/

 Thanks by
http://www.indg.in

வேளாண் பொருள் பதப்படுத்துதல்





தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்ப மையத்தின் மூலம் தரப்படும் வசதிகள்: 

அறுவடைக்குபின்சார் தொழில் நுட்ப மையமானது (PHTC), ஏப்ரல் 2004ம் ஆண்டு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமானத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது பல்துறை மூலம் அறுவடைக்கு பின்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் பொறியியல் நிகழ்வுகள் போன்றவவையையும், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும். தொழில் நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகும். இந்த மையத்தின் செயந்பாடுகள் யாதெனில் பல துறையின் மூலம், குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை தருவது மற்றும் இத்துறையின் விஞ்ஞானிகள், வேலையிலீடுபடும் பொறியியாலளர், உணவு தொழில்நுட்ப வல்லுநர், உணவு நுண்ணுயிரி அறிஞர், உயிர்வேதியியலறிஞர் பூச்சியலறிஞர், தோட்டக்கலை அறிஞர். மற்றும் வேளாண்மை பொருளாதார அறிஞர் போன்றோர்களாக ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறையின் புகழுக்கும், உலக தரத்தின் வசதிகள் போன்றவற்றின், வெற்றிக்கும் இந்த மையமானது முக்கிய பங்கு வகுக்கிறது. அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது இந்தியாவின் ஒரு முன்னணி பிரிவு ஆகும். இதன் இடுபொருட்களைக் கொண்டு உணவு தொழில்முனைவோர்களின் பொருட்களில் மிகச்சிறந்த மேம்பாட்டினை அடைகிறது. இந்த மையமானது பலதரப்பட்ட ஆராய்ச்சியிலும், உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்வணிகச்செயலில் ஈடுபாட்டிலம் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இந்த மையமானது, McGILL பல்கலைக்கழகம், கனடா, உடன் இணைந்து வடக்கு இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு ஒன்று திரட்டுகிறது.

குறிக்கோள்:
  • பழங்கள் மற்றும் காய்கறி போன்ற வர்த்தகம் பொருட்களில் அழுகத்தக்க நிலை வராமல் தடுக்க பதனப்படுத்துதலை மேம்படுத்துவதும் அதற்கு தேவையான கொள்கலனை வடிவமைப்பதும், உலகதரக்கட்டுபாடு மற்றும் நுகர்வோர்களின் தேவையை சந்திப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • பயனுள்ள செலவில் தொழில்நுட்ப செயல்முறைகளும், கருவிகளையையும் விளைநிலத்திற்கு தகுந்தாற் போல் மேம்படுத்துவதும் மற்றும் வேளாண்மை கழிவுகள் மற்றும் உபபொருட்களின் பொருளாதார பயன்பாடு.
  • குளிர் பதன சேமிப்பு சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறுதல், சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்கான வழிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முன் குளிர்வித்தல் வசதிகளை குறைந்த செலவில் தருகிறது.
  • குறைந்த செலவு, சுற்றுச்சூழல் நட்புறவு மற்றும் நுகர்வோர்களை கவரும் தொழில்நுட்பத்தின் பயன்படுத்தும் நிலையை உயர்த்துவதும் மற்றும் உள்நாட்டு மற்றும் உலக விற்பனையை நுகர்வோர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடைமறைப்படுத்துதல்.
  • உற்பத்தி மையத்திற்கு அருகாமையில் வேளாண் பதனப்படுத்தும் வளாகத்தை நிர்ணயப்படுத்துதல்.
  • உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் தொழில் நுட்பம்(தரக கட்டுப்பாடு) போன்றவற்றின் தரத்தினை மேம்படுத்துதல்.
  • தோட்டக்கலை உற்பத்தியின் பதனப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதற்கு விவசாயிகள், தொழில்முனைவோர், முன்னேற்றம் அடையும் துறையின் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்பட்ட் இடங்களில் உணவு பதப்படுத்தும் கருவிகளின் மேம்பாடு.
நோக்கம்:
  • பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பிந்திய உற்பத்தி இயந்திர சாதனம்.
  • தரக்கட்டுப்பாடு, உணவு சோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடம் போன்றவற்றை நிர்ணயப்படத்துதல்.
  • உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பத்தின் புதுமையான ஆராய்ச்சி.
  • அறுவடைக்கு பின் தேசிய மற்றும் சர்வதேச முகாமைத்துவம்.
  • உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் பொது கொள்கைகள் போன்றவற்றின் இதழ்கள்
  • மாவட்ட அளவில் உற்பத்தி மையத்துடன் உணவு பதப்படுத்தும் தொழில் அடைகாக்கும் கருவியை நிருவுதல்.
  • 2020ல் உணவு பாதுகாப்பு.
ஆராய்ச்சி:
PHTC ஆனது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து, முதன்மையான பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த மையத்தின் பலதுறைப்பட்ட குழுவானது தேவையின் அடிப்படையில் மற்றும் தீர்வுகாணும் நோக்கத்துடன் திட்டங்களை னையாளுகின்றனர். சில பிரதான திட்டங்களை இந்த மையங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அவை பின்வருமாறு.
கணேபியர் சர்வதேச மேம்பாடு முகமை (CIDA):
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், கோயமுத்தூர், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம் பொறுப்பெடுக்கும். “தெற்கு இந்திய உணவு பாதுகாப்பு இணைப்பு” என்ற திட்டத்திற்க்கு நிதி உதவியானது டாக்கு G.S.V ராகவன், ஜோம்ஸ் McGILL பேராசிரியர் மூலம் McGILL பல்கலைக்கழகத்தின், கனடா, CIDA மூலம் தரப்படுகிறது. இந்த திட்டமானது 5 ஆண்டுகள் அதாவது 2002 முதல் 2007 வரைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் யாதெனில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை தடுத்து மதிப்பூட்டுவதாகம். இதுமட்டும் அல்லாமல் நடைமுறைக்கான பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு உணவு பாதுகாப்பு மற்றும் இதன் பொருளாதார முன்னேற்றம் அடங்கும். இதன் மூலம் முக்கியமாக விவசாயிகள், கிராமப்புற மகளிர், வேலையில்லா பட்ட்தாரிகள் பயன்பெறுகின்றனர்.

முக்கியமான நடவடிக்கைகள்:
  • தேவையின் அடிப்படியில் அறுவடைக்கு பின் தொழில் நுட்பம், வேளாண்மை வர்த்தகப் பொருட்களின் மதிப்பூட்டல், உணவு பொருட்களின் பதனப்படுத்துதல் போன்றவற்றினை மேம்படுத்துதல்.
  • மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகள், வேலையில்லா பட்டதாரி, தொழில் தொடங்கம் முன் வருபவர்க்ள மற்றும் தன்னார்வ அமைப்பு போன்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி
  • கிராமப்புறத்தில் வேளாண் பதப்படுத்துதல் வளாகத்தை நிருவுதல்
  • கிராமப்புற மகளிர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உணவு பதப்படுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல் மற்றும் உணவு உற்பத்தி பதப்படுத்துவதின் ஆதாயச் செலவு பற்றியும் பயிற்சி அளிக்கிறது.
  • சிறு அளவு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க முன்னோடித் திட்டமுறையை நிருவுதல்
  • செயல்முறையை பொருத்த திட்டத்திற்கு அடிப்படை வசதிகளை உருவாக்குதல்
  • மனித வள மேம்பாட்டிற்காக பணியாட்கள் பரிமாற்றம் நிகழ்ச்சி.
இந்த திட்டமானது அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம், கோயமுத்தூர் மற்றும் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை போன்றவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்கு பின் கையாளப்படும் பழரச பானம், பழச்சத்து, ஊறுகாய், தயார் நிலையில் உள்ள உணவு பானங்கள் போன்ற பதனப்படுத்தலும், பப்பாளி, கோவா, நெல்லி மற்றும் திட்டங்களின் முதலீட்டு முறை போன்றவற்றை பற்றி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தன்னார்வ அமைப்பின் நபர்களுக்கு இலவச பயிற்சிகளை தருகிறது.

பயிற்ச்சிக்கு பின் பதப்படுத்தும் பகுதியில் தொழில் தொடங்க விருப்பம் உள்ள மகளிர்களுக்கும் உதவி புரிகிறது. பயிற்சியானது கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி மற்றும் 25ம் தேதியம், மதுரையில் 19ம் தேதியம் நடத்துகிறது. இந்த பயிற்ச்சிக்கு குறைந்தது 20 நார்கள் தேர்வு செய்கின்றனர்.
சுய வருவாய் திட்டம்:
  • உணவு பதப்படுத்தும் தொழிலின் பாதுகாப்பு கருவி:
இந்த திட்டமானது மார்ச், 2004 முதல் நடைமுறையில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் யாதெனின் தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதும், புதிய உற்பத்தி பொருட்களை உருவாக்குவதாகும்.

தனிப்பட்ட குறிக்கோள்கள்:
  • தொழில் தொடங்குவோர்க்கான உணவு பதப்டுத்தும் தொழில்நுட்பம்
  • வழக்கமான வாடகையின் அடிப்படையில் தனியார் தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் இட வசதிகள்
  • பதப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை மூலம் வருமானத்தை ஈடுத்துதல்
பயிற்சியில் முக்கியத்துவபகுதி:
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல்
  • தக்காளி பொருட்களின் உற்பத்தி
  • உடனடி பருவத்திற்கான பானம், பழரசப்பானம் மற்றும் கருப்பு ஜீஸ் தயாரிப்பு
  • மசாலா பொடி தயாரிக்க சிறு அளவு உற்பத்திக் கூடம்.
தொழில்நுட்ப பரிமாற்றம் பயிற்சி(சுயவருவாய் திட்டம் - FSN):
இந்த திட்டமானது ஜீலை, 2008 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிக்கோள்கள்:
  • மகளிர் குழுக்க்ள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு வேளர் பதப்டுத்துதல் பற்றிய தொழில் நுட்பங்கள், திறன் போன்றவற்றை தருதல்.
  • உணவு பதப்டுத்துதல் தொழில் தொடங்குவதற்கான தொழில்நட்ப பரிமாற்றது.
செயல்முறைகள்:
  • மகளிர் குழுக்கள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு ஊக்க பயிற்சி
  • நுட்பமான திட்ட அறிக்கை, கையேடு, பாட புத்தகம் போன்றவற்றை தயாரிப்பது
முக்கியத்துவ பகுதி:
  • குடிலில் பதனப்படுத்தும் பிரிவு நிருவுதல்
  • குடிலில் ஊறுகாய் தயாரிப்பு பிரிவு நிருவுதல்
  • சிறு அளவு பேக்கரி பிரிவு நிருவுதல்
  • உடனடி உணவு கலவை
  • இனிப்புகள், உணவு மசியல் மற்றம் தின்பண்டங்கள் போன்றவற்றின் வீட்டுத் தயாரிப்பு
  • நெல்லி, காளான், மற்றும் முருங்கை போன்றவற்றின் பதப்டுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல்.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்துதலின் பயிற்சி மையம்:
முக்கிய குறிக்கோள்கள்:
  • பழரசபானம், ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சியை தொழில் தெரடங்குவோர், மனைவிமார்கள், மகளிர்கள்,போன்றோருக்கு அளிக்கிறது.
  • அறுவடைக்கு பின் செயல்பணிச்செயல், காய்கறி மற்றும் பழங்களின் பதப்டுத்துதல் செயல்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிக்கும் முறையில் விரிவாக்கம்
  • வறட்சியான பகுதியில் வளரும் அந்தி, வெஸ்ட் இந்தியன் செர்ரி, நெல்லி, விளாப்பழம் போன்ற பழங்களின் உநற்பத்தி மேம்பாடு மற்றும் பதனப்படுத்துதளின் செயல்முறைகள் தற்போதய செயல்முறைகள்:
  • பழரச பானம், ஜாம் போன்ற வர்த்தக உற்பத்தி
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் பதனப்படுத்தும் பயிற்சி
பயிற்சியில் முக்கியத்துவ பகுதி:
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதனப்படுத்துதல்
ICAR - ADHOC - ஆராய்ச்சி திட்டம் - ஒட்டுமொத்த கிராமப்புற குடும்பங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் தாக்கம்:
இத்திட்டத்தின் குறிக்கோள்:
  • கிழக்கு மதுரை மற்றும் மேலூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கிராமத்தின் ஒவ்வொரு குடும்பங்களிலும், அவர்கள் கல்வியறிவு, மனநிலை, பொருளாதாரம்  மற்றும் சமூக பிரச்சனைகளை கண்டறிவதற்கான நடத்தப்படும் கருத்தாய்வு
  • பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மகளிர் வருவாய் ஈடுவதற்கான செயல்முறைகளை கண்டறிதல்
  • மாளிர்களுக்கு தொழில்நுட்ப திறன் மற்றும் அதனை பற்றிய ஆற்றலை தெரிவிப்பதன் மூலம் அவர்களின் வருவாயை ஈட்டலாம்
  • பயன்பெறுபவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வசதிகள்
  • கொடுக்கப்படும் பயிற்சியின் மூலம் கிராம குடும்பங்கள் மனநிலை சமூக பிரச்சனைகள் தர்க்கப்படுவதின் மதிப்பீடு
  • மதுரையின் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஒருங்கிணைப்பு, வழிகாட்டு மற்றும் ஆராய்ச்சியுடன் பயிற்சி மையத்தை நிருவுதல்
தற்போதைய செயல்முறைகள்:
  • வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சி
  • பிரச்சனைகள் உள்ள குடும்பங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
பயிற்சியில் முக்கியத்துவ பிரிவு:
  • வீட்டில் தயாரிக்கும் பொருட்களான சோப்பு ஆயில், சோப்புத் தூள், கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவை
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனப்படுத்தும் பொருட்களான ஜாம், பழரச பானம், ஊறுகாய் போன்றவை.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் அமைச்சவை - சிறு அளவு பேக்கரி பிரிவை நிருவுதல்:
நவம்பர் 2004ல் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் குறிக்கோள் யாதெனில் பயிற்றுவிப்பது, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்களுக்காக சிறு அளவு பேக்கரி பிரிவினை அமைத்தல். பெரும்பாலும் இந்த திட்டமானக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சிறு அளவு தொழில் முனைவோர்கள் போன்றோர்க்கு பயிற்சி அளிப்பதாகும்.

கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்கள்: 
1.உணவு பதப்படுத்தும் பகுதி: 
காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் இருந்து ஜாம், ஜெல்லி, பழரச பானம், உடனடி பருகுவதற்கு ஏற்ற பானம், தக்காளி பொருட்கள், ஊறுகாய், மசாலா பொடி கோன்றவற்றை தயாரிப்பதற்கான இயந்திர சாதனங்களை உள்ளடக்கிய பகுதி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் உணவு பதப்படுத்தம் பகுதியில் உள்ளனவாகும். நீராவி கொதிகலன், பழங்கள் கழுவும் கருவி, காய்கறி வெட்டும் கருவி, பழ கூழாக்கும் கருவி, நிராவி கெண்டி, சுரண்டும் கருவி, நுண்ணுயிர் நீக்கும் கருவி, புட்டியில் அடைத்தல், மூடி இடுதல், பொருளை நிரப்புதல் மற்றும் அடைக்கும் கருவி, மின் அடுப்பு, சிறிய பாக்கெட்டின் நுண்ணுயிர் நீக்கும் கருவி, மசாலா வறுப்பான், ரிப்பன் கலப்பான், கரும்பு பிழிப்பான், புட்டி கலுவுதல் மற்றும் அலசும் பகுதி, பயிர் வகைகளை அரைக்கும் பிரிவுடன் காற்று மூலம் உமி பிரிக்கும் கருவி, டின்னில் அடைத்து வைக்கும் கருவிகள், உரைவு மற்றும் குளிர்விப்பு அறை.

அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மையத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் பகுதியானது பயிற்றுவிக்க மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியின் பதப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

2. பேக்கரி பகுதி:
பேக்கரி பகுதியில் சுழலும் மின்அடுப்பு, நாட்டுமின்னடுப்பு, பிசையும் கருவி, கலக்கும் கருவி, ரொட்டி அச்சுவார்பான், இதழாக பிரிக்கும் கருவி, மற்றும் துண்டுக்களாக்கும் கருவி போன்ற நவீனமயமான கருவிகளை கொண்டது. இதன் உற்பத்தி கொள்ளளவு ஆனது ஒரு நாளைக்கு 6,000 ரொட்டிகள் ஆகும்.

CIDA:
அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது, பல்வேறு செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி, பயன்படுத்துவர்களுக்கு உதவும் வகையில் பொருட்களை தருகிறது. இந்த செயல்முறைகளான ஆய்வு கூடங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

இயந்திர சாதனங்களுக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள்:
  • McGILL பல்கலைக்கழகம், கனடா, கொடுக்கும் விளைநிலங்கள் பயிற்சியானது பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது மற்றும் கீழ்கண்ட பல்வேறு செயல்களை தொடர்ந்து நடத்துவதற்கும் உதவிபுரிகிறது.
  • தொழில் முனைவோர்களின் மே்பாட்டினை பொருத்து பயிற்சியன் பயனை அறிவதற்கான மதிப்பீடு ஆய்வினை நடத்துகிறது.
  • வேளாண் பதப்படுத்தும் வளாகத்தை எற்படுத்துதல், தொழில் நுட்ப பொருளாதாரத்தை மதிப்பீடுதல்.
விரிவாக்க முகமைகளின் கூட்டு:
தான் (Dhan) அறநிறுவனம், மதுரை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA), கோயமுத்தூர்
மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்.

பயிற்சி: 
உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்பணிச் செயல்களை பற்றி மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த மையமானது தொழில் முனைய பயிற்சியை அளிக்கிறது. பயிற்சியை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

CIDA பயிற்சி: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி (10 - ம் தேதி மற்றும் 12 - ம் தேதி)
GOI பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
ICAR பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
MFPI: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி

தொழில்முனைவோர்க்கு பயிற்சி
THANKS BY http://agritech.tnau.ac.in
ஆதாரம்: www.tnau.ac.in