Wednesday, April 20, 2011

கூடுதல் ஓட்டுப்பதிவால் அரசியல் கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் திக்...திக்...


தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் திக்...திக்...?
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தல்களை காட்டிலும் ஓட்டுப்பதிவு சதவிகிதம் கூடியுள்ளதால் அது யாருக்கு சாதமாக அமையும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இரு அணிகளுமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. ரிசல்ட் தெரிய ஒரு மாதம் ஆகும் என்பதால் வேட்பாளர்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்களை விட தற்போது ஓட்டுப்பதிவு சதவிகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. 60 சதவிகித ஓட்டு சதவிகிதமே அதிகமாக இருந்த காலம் மாறி பெரும்பாலன மாவட்டங்களில் 80சதவிகிதத்திற்கும் அதிகமாக பதிவாகியது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் சேர்ந்து மொத்தம் 80.6 சதவிகிதம் பதிவாகியது. இதில் கடலூர் 77, பண்ருட்டி 82, நெய்வேலி 82, விருத்தாசலம் 81, திட்டக்குடி 79, குறிஞ்சிப்பாடி 86, புவனகிரி 80, சிதம்பரம் 77, காட்டுமன்னார்கோவில் 78 சதவிகிதம் ஆகும். 1971ம் ஆண்டு முதல் 2006 வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் இதுவரை 80 சதவிகிதம் ஓட்டுப்பதிவு நடந்ததில்லை. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் மக்கள் தைரியமாகவும், நிம்மதியுடனும் வந்து ஓட்டளித்தார்கள், அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், நடுநிலையாளர்கள், படித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் ஓட்டளித்ததால்தான் இந்த உயர்வுக்கு காரணம் என பல தரப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். ஆனால் ஆர்வமுடன் ஓட்டுபோட்டவர்கள் யாருக்கு போட்டார்கள் என்பது தான் புதிராக உள்ளது. அதிக ஓட்டுப்பதிவு ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பை காட்டுவதாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள் ளது. ஆனால் ஆளுங்கட்சி கூட்டணியினர் மட்டுமே தேர்தலில் பண பட்டுவாடா தாராளமாக்கியதால் கூடுதல் ஓட்டுப்பதிவு அவர்களுக்கு சாதமாகிவிடுமோ என எதிரணியான அ.தி.மு.க., அச்சப்படுகிறது. விலைவாசி உயர்வு, இலவசம், டாஸ்மாக் கடை போன்றவற்றை விரும்பாத நடுநிலையாளர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள், படித்தவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதன் எதிரொளிதான் ஓட்டுப்பதிவு உயர்வுக்கு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவிகிதத்தை இரு அணிகளுமே யாருக்கு சாதகமாக அமையும் என்று யூகிக்க முடியாத நிலையில், தினம், தினம் கூறப்படும் புதுப்புது தகவல்களால் குழப்பத்தின் உச்ச நிலைக்கே சென்று வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலையில் கடலூர் மாவட்ட கட்சியினரும், வேட்பாளர்களும் தூக்கமின்றி ரிசல்ட் நினைவாகவே இருந்து வருகின்றனர். வேட்பாளர்கள், கட்சியினரை விட ஓட்டுப்போட்ட பொதுமக்கள் ரிசல்ட் யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இரு அணி தலைவர்களும், வேட்பாளர்களும் டென்ஷனில் இருந்துவர, மக்களிடம் தீர விசாரிச்சாச்சு, "நாமதான்' என கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர்.

கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?


வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?
 
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2011,23:20 IST
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும், ஓட்டு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன.இந்நிலையில், வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரதான கட்சிகளிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 17ம் தேதி, சட்டசபையை கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அத்தேதியுடன் சட்டசபை ஆயுட்கால வரையறை முடிகிறது.இதுபோன்ற சூழலில், ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், வெறும் நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால், இந்த குறுகிய காலத்திற்குள் ஆட்சி அமைக்க தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று, கட்சிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமெனில், 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பதில் சாத்தியமில்லை. இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளார். அதனால் தான், "கூட்டணி ஆட்சி அமைக்க தி.மு.க.,விற்கு தயக்கம் எதுவும் இல்லை' என, ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை. முதலில் முதல்வர், மற்ற இரு அமைச்சர்கள் பதவி ஏற்பு என்றாலும், அதைப் பேசி முடிவு செய்வதற்கு காலஅவகாசம் தேவை.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இக்கட்சி 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால், எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஓரிரு நாளில் அ.தி.மு.க., அரசு பதவியேற்கலாம். அதிலும் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் போது கூட்டணிக் கட்சிகள் வருத்தமுறாதவகையில் தேர்வு தேவை. வேட்பாளர் பட்டியல் போல, முதலில் அறிவித்து பின்பு மாற்றினால் அது பிரச்னையை ஏற்படுத்தும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை வந்தால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, "ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்' என, தெளிவாக கூறிவிட்டது.எனினும், இரு அணிகளிலும் இழுபறியான நிலை காணப்பட்டால், தேர்தல் முடிவுக்குப் பின், ஒவ்வொரு கட்சியில் இருந்தும், "இழுக்கின்ற' வேலைகள் நடக்கலாம். இதனால், கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படப்போவது உறுதி. இதையெல்லாம் நினைத்து, அரசியல் கட்சிகள் இப்போது குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியின்றி தவித்து வருகின்றன.

எப்படியிருந்தாலும், எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ, அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார்.ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.அதைவிட, தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 13ம் தேதியே தெரிந்த போதும், வெற்றி பெறும் வேட்பாளர், தேர்தல் அதிகாரியின் சான்றிதழை அதே நாளில் பெற்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளை கமிஷன் அறிவித்து, சட்டசபையை கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர வேண்டும். அதற்குப் பின், இடைக்கால சபாநாயகர் தேர்வு என்று ஏராளமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இத்தடவை தமிழகத்தில் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் மட்டுமல்ல, காத்திருப்புக்குப் பின் அரசு அமைவதும் பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
-

Friday, April 15, 2011

சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாக தேர்தல் ஆணையம்


 நாங்க மாறிட்டோம்.. நீங்க?

First Published : 16 Apr 2011 02:10:22 AM IST


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்கும் வாழ்த்தப்பட வேண்டியவை ஊடகமும், தேர்தல் ஆணையமும்தான்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் (4.7 கோடி பேர்) 18 வயது முதல் 29 வயதுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு. இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை, இவர்கள் பத்திரிகை படிக்கிறவர்களாகவோ, அல்லது தொலைக்காட்சிகளைப் பார்க்கிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதும். இணையதளத்தில் தங்கள் வலைதளங்களுக்குள் புகும் முன்பாக, கூகுள் அல்லது யாகு தரும் செய்திகளையும் போகிறபோக்கில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். இதற்கான முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பம்தான்.
இந்த இளைஞர் கூட்டத்தில் வழக்கமாக வாக்களிக்க வருவோர் மட்டுமன்றி, பெருவாரியாக வாக்களிக்க வந்த காரணத்தால்தான் வழக்கமான 65 விழுக்காடு வாக்குப்பதிவு இந்த முறை 77.8 விழுக்காடு என உயர்ந்தது. அதற்காக இவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இன்றைய இளைஞர்களின் மனப்போக்கு வித்தியாசமானது. கதாநாயகர்களுடன் மட்டுமல்ல, வில்லன்களுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வித்தியாசமான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். இவர்கள் ஊழல்பேர்வழிகளுக்கு எதிராகத் திரண்டார்கள் என்று ஒரேயடியாக நம்புவதற்கு இல்லை.
இரண்டாவது காரணம் தேர்தல் கமிஷன். மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரியதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாகவும் இருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே.
இந்தமுறை தேர்தல் காலத்தில், ஊடகம் பார்த்தோரும், பத்திரிகை படித்தோரும் பேசிக்கொண்டவை அனைத்தும்- அது வீட்டுச் சமையல்கூடமாக இருந்தாலும் டீக்கடையாக இருந்தாலும்- தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள் பற்றித்தான். என்னதான் தமிழக முதல்வர் கருணாநிதி புலம்பித் தீர்த்தாலும், மக்கள் அதன் நடவடிக்கைகளால் மனம் மகிழ்ந்தார்கள். தங்கள் வீட்டுச்சுவர்கள் நாசப்படுத்தப்படாத ஒரே காரணத்துக்காகத் தேர்தல் கமிஷனுக்கு மதிப்பளித்தார்கள். எங்குபார்த்தாலும் ஒலிபெருக்கிகள் இல்லாத சூழலைப் பாராட்டினார்கள். வீடுதேடி வந்து பத்திரிகை வைத்துவிட்ட ஒரே காரணத்துக்காக கல்யாணத்துக்குப் போய் தலையைக் காட்டுவதுபோல, தேர்தல் கமிஷனின் நேர்மைக்காகவே வாக்குச் சாவடிக்கு வந்த பொதுமக்களும், அறிவுஜீவிகளும் அதிகம். அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கியது தேர்தல் ஆணையம்.
இந்த முறை பூத் சிலிப்புகளைத் தேர்தல் ஆணையமே வழங்கியது. அழகாகப் படத்துடன்கூடிய ரசீதுகளை அளித்தது. வாக்குச் சாவடிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர், தேர்தல் ஆணையம் அளித்த இந்த பூத் சிலிப்புகளை வைத்துக்கொண்டுதான் வாக்களித்தார்கள் என்பது நாளிதழ், தொலைக்காட்சி பார்த்த எவராலும் யூகிக்க முடியும். முன்பெல்லாம் ஏதோ ஒரு அரசியல் கட்சியினர் அவர்கள் சின்னத்துடன் பூத் சிலிப் கொடுக்கும்போது அதைக் கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது வாக்காளர் பொதுமனிதராக வாக்குச்சாவடியில் வரிசையில் கூச்சமின்றி, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் நிற்கமுடிந்தது. இதற்காகவே வோட்டுபோட வந்தவர்களும் அதிகம்.
மேலும், இந்தப் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. பூத் ஏஜன்டாக இருப்பவர் தனது வரையறைக்கு உள்பட்ட நான்கு அல்லது ஐந்து தெருக்களுக்கான வாக்காளர்களைப் பெயர் வைத்து அறிவதில்லை. மாறாக, புகைப்படத்தை வைத்தே அறிந்துகொள்ளும் சூழல். இதனால் யார் வாக்களிக்க வரவில்லை என்பதை அவரால் மிகத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். கிராமங்களில் அத்தகைய சூழலில், மறுநாள் சந்திக்கும்போது, வயற்காட்டுக்குப் போகும்போது, நீ வோட்டுபோடவே வரவில்லையே என்று எல்லார் முன்னிலையிலும் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற கூச்சமும்;எல்லாரும் போய்ப் போட்டுவரும்போது நாம் மட்டும் சும்மா இருப்பதா என்கிற பெருந்திரள் மனநிலையையும் (மாஸ் சைக்காலஜி) உருவாக்கியதில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் தங்கள் பிரசாரத்துக்கு கூட்டத்தைக்கூட கூட்ட முடியவில்லை என்கிறபோது, இந்த அதிகபடியான வாக்காளர்கள் அரசியல் ஈடுபாட்டால் வாக்களிக்க வரவில்லை என்பது நிச்சயம். அரசியல்வாதிகள் தங்கள் பொய்முகங்கள் கிழிந்து அம்பலப்பட்டுக் கிடக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் பேச்சைக் கேட்கவே பணம் கொடுத்து ஆள்திரட்டும் நிலை, கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால், இந்த கூடுதல் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்திருந்தபோதிலும், ஊழலுக்கு எதிராக அல்லது விலைவாசி உயர்வுக்கு எதிராக என எதுவாக இருந்தாலும், தங்கள் கடமையாற்றும் உணர்வால் உந்தப்பட்டு வந்தவர்கள் இவர்கள், இந்த உணர்வை ஊட்டியவர்கள் தேர்தல் ஆணையமும், ஊடகங்களுமே.
மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களும் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் (தங்களுடைய வருங்காலச் சந்ததியினரை அல்ல) நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும். இந்தியா வல்லரசாக உலக அரங்கில் மிளிரும்.
நன்றி
இடுகையிட்டது  

Thursday, April 14, 2011

வேண்டுமா ?


 இந்த ஆட்சி தொடர வேண்டுமா ?அச்சிடுகமின்-அஞ்சல்

பயனாளர் மதிப்பீடு: / 28
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 07:50

karunanithi

congress

dmk-congress-bala-cartoons-29-10-08-

dmk-eelam-bala-cartoons-5-11-08-a

dmk-eelam-bala-cartoons-11-3-09-c

dmk-famly-bala-cartoons-3-6-09

dmk-karuna-bala-cartoons-14b-27-01-09

karuna-manmohan-bala-cartoons-4-2-09