Thursday, July 26, 2012

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்


THANK S BY இஸ்லாம்கல்வி.காம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
Articleகுர்ஆனிலிருந்து..

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ

9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ

10. எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! 10:86

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ

11. என் இறைவனே! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். 11:47

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

12. என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!. 14:40

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

13. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!. 14:41

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

14. எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! 18:10

رَبِّ زِدْنِيْ عِلْمًا

15. என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

16. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன். 21:89

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ

17. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 23:97

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

18. எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன். 23:109

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

19. என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். 23:118

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

20. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். 25:65

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

21. எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ

22. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! 26:83

وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ

23. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக! 26:84

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

24. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! 26:85

وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

25. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக! 26:87

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

26. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! 27:19

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

27. என் இறைவனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! 28:16

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

28. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக. 37:100

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ

29. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன். 46:15

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

31. எங்கள் இறைவனே! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 60:5

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

32. எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். 66:8

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا

33. என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே. 71:28

ஹதீஸிலிருந்து..

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ اْلعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَ دُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِىْ، وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ.

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)

اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ،لاَ اِلَهَ إِلاَّ أَنْتَ.

2. யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)

اَللََّّهُمَّ إِنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اَللََّّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ،

3. யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)

اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ، فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ. ( بخاري)

4. யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذَ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

5. யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடனின் சுமை மற்றும் மனிதனின் ஆதிக்கம் அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)

اَللَّهُمَّ اجْعَلْ أَوَّلَ هَذَا النَّهَارِ صَلاَحًا وَأَوْسَطَهُ فَلاَحًا وَآخِرَهُ نَجَاحًا، وَأَسْأَلُكَ خَيْرَ الدُّنْيَا يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

6. யா அல்லாஹ்! இந்த பகலின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكُ الرِّضَى بَعْدَ الْقَضَاءِ وَبَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَلَذَّةَ النَّظَرِ فِي وَجْهِكَ الْكَرِيمِ وَشَوْقًا إِلَى لِقَائِكَ مِنْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ ، أَعُوذُ بِكَ اللَّهُمَّ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَعْتَدِيَ أَوْ يُعْتَدَى عَلَيَّ أَوْ أكْسِبَ خَطِيئَةً مُخْطِئَةً أَوْ ذَنْبًا لا يُغْفَرُ.

7. விதியை பொருந்திக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது மன்னிக்கப்படாத தவறு மற்றும் பாவத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (தப்ரானி)

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.

8. யா அல்லாஹ்! கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)

اَللَّهُمَّ اهْدِنِيْ لِأَحْسَنِ الْأَعْمَالِ وَأَحْسَنِ الْأَخْلاَقِ لاَ يَهْدِي لِأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَقِنِيْ سَيِّئَ الْأَعْمَالِ وَسَيِّئَ الْأَخْلَاقِ لاَ يَقِي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ.

9. யா அல்லாஹ்! நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! (திர்மிதி)

اََللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ، وَبَارِكْ لِيْ فِيْ ِرزْقِيْ.

10. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக!. (மஜ்மஃ ஸவாயித்)

اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا.

11. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதனைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே! யா அல்லாஹ்! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(முஸ்லிம்)

َاَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ.

12. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)

اََللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيْعِ سَخَطِكَ.

13. யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய (சகலவிதமான) கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (முஸ்லிம்)

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَدْمِ وَالتَّرَدِّي وَالْهَرَمِ وَالْغَرَقِ وَالْحَرِيْقِ وَأَعُوْذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَنْ أُقْتَلَ فِيْ سَبِيْلِكَ مُدْبِرًا وَأَنْ أَمُوْتَ لَدِيْغًا.

14. யா அல்லாஹ்! (ஏதேனும்) இடிந்து விழுவதிலிருந்தும், உயரத்திலிருந்து கீழே விழுவதிலிருந்தும், முதுமையிலிருந்தும், நீரில் மூழ்குவதிலிருந்தும், எரிந்து இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உன் பாதையிலே புறமுதுகு காட்டி கொல்லப்படுவதை விட்டும் (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அஹ்மத்)

أَعُوْذُ بِكَ مِنْ طَمَعٍ يَهْدِي إِلَى طَبْعٍ.

15. யா அல்லாஹ்! உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(ஷரஹுஸ்ஸுன்னா)

اََللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلاَقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ.

16. யா அல்லாஹ்! கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.(திர்மிதி)

اََللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِيْ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِىْ، وَأصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ، وَأصْلِحْ لِىْ آخِرَتِيْ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ، وَاجْعَلِ الْحَيَاةَ ِزيَادَةً لِيْ فِيْ كَلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلِّ شَرٍّ.

17. யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக! (முஸ்லிம்)

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ. (نسائي)

18. யா அல்லாஹ்! (சகல நல்ல) காரியங்களில் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நலவுகளை (எல்லாம்) கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த எல்லா கெடுதிகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (நஸாயி)

اَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَقِنِيْ شَرَّ نَفْسِيْ.

19. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! (திர்மிதி)

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ.

20. யா அல்லாஹ்! நற்காரியங்களைச் செய்யவும், வெறுக்கத்தக்க காரியங்களை விட்டுவிடவும், ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து, என் பாவங்களை மன்னித்து, எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். ஒரு கூட்டத்தை நீ குழப்பத்தில் ஆழ்த்த விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக! (யா அல்லாஹ்!) உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் சமீபமாக்கி வைக்கக்கூடிய அமலின்மீது நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (திர்மிதி)

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ وَخَيْرَ الدُّعَاءِ وَخَيْرَ النَّجَاحِ وَخَيْرَ الْعَمَلِ وَخَيْرَ الثَّوَابِ وَخَيْرَ الْحَيَاةِ وَخَيْرَ الْمَمَاتِ وَثَبِّتْنِيْ وَثَقِّلْ مَوَازِيْنِيْ وَأَحِقَّ إِيْمَانِيْ وَارْفَعْ دَرَجَتِيْ وَتَقَبَّلْ صَلاَتِيْ وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ .

21. யா அல்லாஹ்! சிறந்த வேண்டுகோளையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த அமலையும் சிறந்த நன்மையையும் சிறந்த உயிர்வாழ்வையும் சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (யா அல்லாஹ்!) என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.

22. யா அல்லாஹ்! நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرَ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَ لِيْ قَلْبِيْ ، وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْـجَنَّةِ

23. யா அல்லாஹ்! நீ என்னுடைய ஞாபகத்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் என் காரியத்தை சீர்படுத்துவதையும் என் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் என்னுடைய உள்ளத்தை இலங்கச் செய்வதையும் என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(யா அல்லாஹ்!) இன்னும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَاِركَ لِيْ فِيْ نَفْسِيْ، وَفِيْ سَمْعِيْ، وَفِيْ بَصَرِيْ، وَفِيْ رُوْحِيْ، وَفِيْ خَلْقِيْ، وَ فِيْ خُلُقِيْ، وَفِيْ أَهْلِيْ، وَفِيْ مَحْيَايَ، وَفِيْ مَمَاتِيْ، وَفِيْ عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.

24. யா அல்லாஹ்! என் ஆத்மாவிலும் என் கேள்விப்புலனிலும் என் பார்வையிலும்; என் உயிரிலும் என் உடலமைப்பிலும் என் குணத்திலும் என் குடும்பத்திலும் என் உயிர்வாழ்விலும் என்னுடைய மரணத்திலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆகவே, என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ.

25. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (புகாரி)

اَللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ.

26. உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ.

27. உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!. (முஸ்லிம்)

اَللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَارْضِنَا وَارْضَ عَنَّا.

28. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! எங்களை இழிவு படுத்திவிடாதே! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! (உன் அருளைப்பெறாத) துற்பாக்கியவான்களாக எங்களை ஆக்கிவிடாதே! (உன் அருளைப்பெற) எங்களை தேர்ந்தெடுப்பாயாக! பிறரை எங்களைவிட தேர்ந்தெடுக்காதே! எங்களை பொருந்திக் கொள்வாயாக! இன்னும் எங்களைத் தொட்டும் (அமல்களை) பொருந்திக் கொள்வாயாக! (திர்மிதி)

اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُوْرِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ.

29. யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! (அஹ்மத்)

اَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُوْلُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيْبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا.

30. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களைத் தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! (யா அல்லாஹ்!) எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்தியையும் நீ எங்களை உயிர்வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! (எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே! (திர்மிதி)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ.

31. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (தப்ரானி)

اَللَّهُمَّ لاَ تَدَعْ لِيْ ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ، وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ، وَلاَ دَيْنًا إِلاَّ قَضَيْتَهُ، وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلاَّ قَضَيْتَهَا بِرَحْمَتِكَ يَا أرْحَمَ الرَّاحِمِيْنَ.

32. யா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை, நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் எத்தேவைகளையும் உன் அருளைக் கொண்டு எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே! (தப்ரானி)

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ عِنْدَ الْقَضَاءِ، وَنُزُلَ الشُّهَدَاءِ، وَعَيْشَ السُّعَدَاءِ، وَمُرَافَقَةَ الأَنْبِيَاءِ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ

33. யா அல்லாஹ்! தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ صِحَّةً فِيْ إِيْمَانٍ، وَإِيْمَاًنا فِيْ حُسْنِ خُلُقٍ، وَنَجَاحًا يَتْبَعُهُ فَلاَحٌ، وَرَحْمَةً مِنْكَ وَعَافِيَةً وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا

34. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் ஆரோக்கியத்தையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)

اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ، وَالْأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَى بِالْقَدْرِ.

35. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் அமானிதத்தை பேணுதலையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஷுஅபுல் ஈமான் லில்பைஹகி)

اَللَّهُمَّ إِنَّكَ َتَرَى مَكَانِيْ، وَتَسْمَعُ كَلاَمِيْ، وَتَعْلَمُ سِرِّيْ وَعلاَنِيَتِيْ، لاَ يَخْفَى عَلَيْكَ شَيْئٌ مِنْ أمْرِيْ، أنَا الْبَائِسُ الْفَقِيْرُ، الْمُسْتَغِيْثُ الْمُسْتَجِيْرُ، الْوَجِلُ الْمُشْفِقُ، الْمُقِرَّ الْمُعْتَرِفُ بِذَنْبِهِ، أسْألُكَ مَسْألةَ الْمِسْكِيْنِ، وَأبْتَهِلُ إِلَيْكَ إِبْتِهَالَ الْمُذْنِبِ الذَّلِيْلِ، وَأدْعُوْكَ دُعَاَءَ الْخَائِفِ الضَّرِيْرِ، مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ، وَذَلَّ جِسْمُهُ، وَرَغِمَ أنْفُهُ.

36. யா அல்லாஹ்! என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள, இழகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்!) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக, நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)

اَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْلِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ.

37. யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)

اَللَّهُمَّ اغْفِرْلِيْ مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ.

38. யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ.

39. யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக! (அபூதாவூத், நஸாயி)

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ.

40. யா அல்லாஹ்! கஞ்சத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் கோழைத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் உலகத்தின் குழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.

41. யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன். (அபூதாவூத்)

اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِيْ، اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَ يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَأَسْأَلُكَ الشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ.

42. யா அல்லாஹ்! உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்) நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக! நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன். சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன். செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன். முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (அஹ்மத்,நஸாயி)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَااَلله بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوبِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ .

43. யா அல்லாஹ்! நிச்;சயமாக நீ ஏகன், தனித்தவன், தேவையற்றவன், யாரையும் பெறாதவன்,எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை என்ற (உன் திருநாமம் மற்றும் உன் பண்புகளைக்) கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன், நீ என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீ, மிக பிழை பொறுப்பவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றாய். (அபூதாவூத்)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلَهَ إِلاَّ أنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا بَدِيْعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.

44. யா அல்லாஹ்! நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே! மகத்தவமும் கண்ணியமும் உடயவனே! நித்திய ஜீவனே! (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். (அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி-)

இஃதிகாப்


இறுதிப் பத்தில் இஃதிகாப் எனும் ஸுன்னாவை உயிர்ப்பித்து நரக விடுதலையை அடைந்து கொள்வோம்!



மகத்துவம் பொருந்திய ரமழானின் ரஹ்மத்தையும் மஃபிரத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு முஃமின் ஆசை வைக்கும் அடுத்த அம்சம் “இத்கு மினன் நார்” எனப்படும் நரக விடுதலையாகும்.
 
“எனவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு, சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்” (ஆல இம்ரான் : 185)
 
நரக விடுதலை என்பது இறை வழிபாடுகளில் ஈடுபடுவது,அவற்றில் விடாப்பிடியாக இருப்பது, வல்ல அல்லாஹ்விடம திக்ருகள் ஊடாகவும் பிரார்த்தனைகள் ஊடாகவும் ஏனைய வணக்க வழிபாடுகள் ஊடாகவும் அதிகமதிகம் அழுது கெஞ்சிக் கேட்பது போன்ற விடயங்கள் ஊடாக அடையப் பெறுவதே. அதற்கு சிறந்த சாதனமாக இருப்பது “இஃதிகாப்” என்ற வணக்கமாகும். தனது அன்றாட சோலிகளை விட்டும் தன்னை துண்டித்துக் கொண்டு தனது இரட்சகனின் வாயிலில் நின்று அவனது மன்னிப்பையும் அருளையும் அவனது தண்டனையிலிருந்து விடுதலையையும் வேண்டுவதற்கு இத்தினங்களில் இஃதிகாப் இருப்பது சாலப் பொருத்தமாக அமையும்.
 
நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தில் மிக மிக உற்சாகமாகக் காணப்படுவார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இமாம் புகாரியின் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. “இறுதிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு அதன் இரவுகளை (வணக்க வழிபாடுகளால்) உயிர்ப்பிப்பார்கள். தனது மனைவியரையும் எழுப்பி விடுவார்கள்.”
 
ஆயிஷா (ரழி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பும் இத்தினங்களில் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு உற்சாகமாகவும் சுறு சுறுப்பாகவும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை தௌிவுபடுத்துகிறது. “நபி (ஸல்) அவர்கள் வேறு தினங்களில் சிரமம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு இத்தினங்களில் (வணக்க வழிபாடுகளுக்காக) சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறாாகள்” (முஸ்லிம்)
 
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது. “நபி (ஸல்) அவர்கள் அனைத்து ரமழானிலுமே பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நபியவர்கள் வபாத்தான ஆண்டு மட்டும் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.”
இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தனது பத்ஹுல் பாரி எனும் கிரந்தத்தில் குறிப்பிடும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி வருடத்தில் இஃதிகாபின் கால அளவை இரட்டிப்பாக்கியமைக்கான காரணம் அன்னார் தமது இறுதி முடிவு நெருங்கி விட்டதை அறிந்திருந்தமையாகும். எனவே நபியவர்கள் தமது நல்லமல்களை அதிகாித்துக் கொள்ள விரும்பினார்கள். அதனூடாக தமது உம்மத்திற்கு நல்லமல் புரிவதில் மிகுந்த சிரமமெடுத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையிலேயே அவர்கள் தமது இரட்சகனை சந்திக்க வேண்டும் என்ற செய்தியை உணர்த்த விரும்பினார்கள் என்கிறார்.
 
உண்மையில் மனிதன் தனக்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் நீண்ட நேரங்களை செலவிடுகிறான். அவ்வாறிருக்கும் போது தனது இரட்சகனுக்காக வருடத்தில் பத்து நாட்களை ஒதுக்கி தனது அன்றாட உலக சோலிகளை விட்டொதுங்கி தனது இரட்சகனோடு தனித்திருப்பதற்காக அந்த நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எவ்விதத்திலும் அவனுக்கு குறைந்து போக மாட்டாது. அதனூடாக அவன் மிகப் பெரும் சிறப்பையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறான். மட்டுமல்லாது நரக விடுதலையையும் பெற்றுக் கொள்கிறான்.
 
யாரெல்லாம் “இஃதிகாப்” எனும் அந்த ஸுன்னாவை உயிர்ப்பிக்கின்றார்களோ அவர்கள் தமது வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எனக் கூறின் அது மிகையாகாது. வெற்றி பெறக்கூடிய மனிதன் தனது அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுகிறான். தனது வாழ்க்கை சார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதில் வெற்றி பெறுகிறான். தனது இரட்சகனுடனான சிறந்த உறவைப் பேணுவதில் வெற்றி பெறுகிறான்.
 
நோய் போன்ற எத்தனை எத்தனை விடயங்களுக்காக மனிதன் தனது அன்றாட செயற்பாடுகளைத் துண்டித்துக் கொண்டு ஓய்வெடுக்கிறான். சிலவேளை அற்பமான காரணங்களுக்காக கூட அவ்வாறு செய்கிறான். அப்படியிருக்கும்போது தனது இரட்சகனுடன் தனித்திருப்பதற்கும் அவனுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் நேரம் செலவிடுவது எவ்வளவு அவசியமானது. இது குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இஃதிகாப் குறித்து அல்-குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளது. “நீங்கள் பள்ளிவாயில்களிலே இஃதிகாப் இருக்கும் நிலையில் பெண்களோடு உறவு கொள்ளாதீர்கள்” (பகரா : 187) போன்ற வசனங்களை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
 
இஃதிகாபுக்காக வேண்டி எமது நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் முடியுமானளவு எமது அன்றாட சோலிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதிலும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். பத்து நாட்களும் தொடராக இஃதிகாப் இருப்பது சிரமமானது எனக் கருதுவோர் அதனை விட குறைந்த நாட்கள் இருக்க முயற்சிக்கலாம். சில ஆலிம்கள் சொல்வது போன்று கூடுதல் நேரமோ குறைந்த நேரமோ இஃதிகாப் நிய்யத்துடன் பள்ளிவாயிலில் ஒரு மணித்தியாலம் அல்லது சில நிமிடங்கள் தான் தாித்திருந்தாலும் அதன் கூலியை பெற்றுக் கொள்ள முடியும்.
 
பெண்களது இஃதிகாப்
 
பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். தனது கணவனின் அனுமதியோடு பொருத்தமான சூழலும் ஆண்களை விட்டும் மறைவாக இருக்கக் கூடிய பொருத்தமான இடமும் பொருத்தமான பள்ளிவாசலும் காணப்படின் அவளுக்கு இஃதிகாப் இருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) மற்றும் ஹப்ஸா (ரழி) ஆகியோருக்கு இஃதிகாப் இருக்க அனுமதியளித்திருக்கிறார்கள். இது பெண்களும் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.
இமாம் புகாரி தனது ஹதீஸ் கிரந்தத்தில் “பெண்களது இஃதிகாப்” எனும் தலைப்பில் ஓர் அத்தியாயத்தை இணைத்திருப்பதும், இமாம் மாலிக் தனது கிரந்தமான “முவத்தா”வில் ஒரு பெண் இஃதிகாப் இருந்து பின்னர் “ஹைழ்” ஏற்பட்டு விட்டால் தனது வீட்டிற்கு அவள் மீண்டு,எந்த கணத்தில் சுத்தமாகின்றாளோ அக்கணமே பள்ளிக்கு மீண்டு விடலாம் எனக் குறிப்பிடுவதும் பெண்களது இஃதிகாபுக்கு மேலும் வலு சேர்க்கும் ஆதாரங்களாகும்.
பொருத்தமான பள்ளிவாயில் காணப்படாதவிடத்து பெண்கள் தத்தமது வீடுகளில் ஓர் இடத்தை ஒதுக்கி – தொழுகையறையாக இருப்பது வரவேற்கத்தக்கது – அங்கு இஃதிகாபின் ஒழுங்குகளைப் பேணி அந்த ஸுன்னாவை நடைமுறைப்படுத்தலாம். எனவே எமது பெண்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். அருள்பாலிக்கப்பட்ட இந்நாட்களை அல்லாஹ்வை வழிபடுவதில் அவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பெண்களில் கணிசமான தொகையினர் பெருநாளைக்குரிய தீன் பண்டங்கள் செய்வதிலும் அத்தினத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் தமக்கும் தமது குழந்தைகளுக்குமான ஆடைகளைக் கொள்வனவு செய்வதிலும் இந்த மகத்தான நாட்களைக் கழித்து விடுகின்றனர். இது மிகவும் கவலையான விடயம். இதனால் கடைசிப் பத்தின் பேறுகளையும், லைலதுல் கத்ருடைய சிறப்புக்களையும் தவற விடுவதோடு நரக விடுதலையும் கூட தவறிவிடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. வல்ல அல்லாஹ் எம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்கள் இவ்விடயத்தில் கூடுதல் கரிசனைக் காட்டுவார்களாக.
 
லைலதுல் கத்ர்
 
இந்த மகத்தான பத்து நாட்களில் ஒரு மனிதன் அடைந்து கொள்ளும் மிகவும் அரிய பொக்கிஷமே லைலதுல் கத்ர் ஆகும். ஆயிரம் மாதங்களின் பேறுகளைப் பெற்றுத் தருகின்ற இம்மகத்தான இரவு எண்பத்து மூன்று வருட நன்மைகளை நமக்குப் பெற்றுத் தருகின்றது. இந்த இரவைக் கூட நபி (ஸல்) அவர்கள் கடைசிப் பத்திலேயே தேடிப் பெற்றுக் கொள்ளுமாறு தூண்டியுள்ளார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் அதனைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றும் இன்னொரு அறிவிப்பில் “ரமழானின் கடைசிப் பத்தில் வரும் ஒற்றை நாட்களில் அதனைப் தேடிக் கொள்ளுங்கள்” என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
 
அன்பானவர்களே! வாழ்க்கையில் கிடைக்கின்ற மிகவும் அரிதான இந்த நாட்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதில் இருந்தே திட்டமிட்டுக் கொள்வோம். எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வோம். “கைலூலா” எனும் பகல் பொழுதில் தூங்கும் சிறு தூக்கம் மூலம் இரவு வணக்கத்திற்குத் தயாராகுவோம். வீண் வாதாட்டங்களையும் சண்டை சச்சரவுகளையும் விட்டுத் தூரமாவதோடு கோபமுற்றிருப்பவர்களை சமாதானம் செய்து வைப்போம். வீண் வாதாட்டமும் சண்டை சச்சரவும் இந்த நாட்களின் மகத்துவத்தை இழக்கச் செய்து விடும் என்பதைக் கவனத்திற் கொள்வோம்.
இந்த நாட்களின் ஒவ்வொரு இரவையும் கியாமுல் லைல் (நின்று வணங்குதல்), அல்குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களால் உயிர்ப்பிப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யார் லைலதுல் கத்ருடைய இரவில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.” (புகாரி)
 
எனவே இந்த பத்து நாட்களிலும் உத்வேகத்தோடு சிரமப்பட்டு இபாதத்களில் ஈடுபடுவோம். இஃதிகாப் அதற்கான சிறந்த சாதனமாக அமையும். இந்நாட்களில் வரும் லைலதுல் கத்ர் எமது முழு வாழ்வையும் விட மேலானது என்பதை எமது சிந்தைக்கெடுப்போம். அந்நாளில் நரக விடுதலையைப்  பெற முயற்சிப்போம். வல்ல அல்லாஹ் எமமனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
THANK S BY
Shahjahan Mohamed Umer


தஹஜ்ஜத்/ தராவீஹ்/ வித்ரு/ இரவுத் தொழுகை/ ஓர் அலசல்



(தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)
நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் – விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.
உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள். ‘அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரடகளே! வித்ருத் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அலி – இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் (ரலி – ம்) ஆகியோர் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)
வித்ருத் தொழுகையின் நேரம்
1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 417)
2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) புகாரி 998)
3) சுப்ஹூக்கு முன் வித்ரை தொழுங்கள் பஜ்ர் நேரம் வந்து விட்டால் இரவுத் தொழுகை – வித்ரு முடிவடைந்து விடுகின்றன என்பது நபிமொழி (அபூஸயீத்(ரலி) திர்மிதி 431)
இந்த மூன்று ஹதீஸில் முதல் ஹதீஸூடன் மற்ற ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தெரிகின்றன. முதல் ஹதீஸ் தூங்குமுன் வித்ரு தொழுது விட வேண்டும் என்கிறது. மற்றவை இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழ வேண்டும் என்கின்றன. இந்த முரண்பாட்டை கலையும் விதமாகவும் மேலதிக விளக்கமாகவும் மற்றொரு ஹதீஸ் கிடைக்கின்றது.
உங்களில் எவரேனும் இரவின் இறுதிப் பகுதியில் விழிக்க முடியாது என்று அஞ்சினால் அவர் வித்ரு தொழுது விட்டு தூங்கட்டும். இரவில் எழலாம் என்று யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர் இரவின் கடைசியில் வித்ரை தொழட்டும் ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் குர்ஆன் ஓதும் போது மலக்குகள் அங்கு வருகிறார்கள் இதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஜாபிர் (ரலி) திர்மிதி 418, புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)
இந்த ஹதீஸ்களிலிருந்து வித்ரு தொழுகையின் நேரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
இனி பலதரப்பட்ட தொழுகை என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் தொழுகைகளைப் பார்த்து விட்டு வித்ரைத் தொடர்வோம்.
1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல்லைல் 3) தஹஜ்ஜத்து 4) தராவீஹ் 5) வித்ரு
இப்படி ஐந்து வித தொழுகைகளை மக்கள் விளங்கி வைத்துள்ளனர். இந்த தொழுகைகளையும் அதன் எண்ணிக்கைகளையும் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பம். அறிஞர்களின் தடுமாற்றம் இவர்களின் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.
ஐந்துப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த தொழுகைகளை ஐந்து விதமான தொழுகை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். இது உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் ஐந்துவித தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள ஐந்துப் பெயர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.
இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.
இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும், குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.
தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை. மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
”நபி(ஸல்) இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று யாருக்காவது சந்தேகம் வரலாம்.
‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.
‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.
உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.
எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – வித்ருத் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.
எண்ணிக்கைகள்.
13 ரக்அத்கள்
நபி(ஸல்) பதிமூன்று ரக்அத் வித்ரு தொழுவார்கள். அவர்கள் முதுமையடைந்ததும் ஏழு ரக்அத் வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆய்ஷா – உம்மு ஸலமா (ரலி -ம்) நஸயி – திர்மிதி 420)
நபி (ஸல்) அதிகப்படியாக பதிமூன்று ரக்அத்களும், குறைவாக ஒரே சலாமில் ஏழு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள். இதைவிட எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ இல்லை.
நபி(ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள் ஐந்து ரக்அத்களை ஒற்றைப்படையில் (வித்ராக) தொழுவார்கள். அவ்வாறு தொழும் போது கடைசி இருப்பைத் தவிர மற்ற ரக்அத்களில் உட்கார மாட்டார்கள். (அதாவது நான்கு ரக்அத்களை தொடர்சியாக தொழுது – நடுவில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதாமல் – ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஓதி முடிப்பார்கள்) (ஆய்ஷா – அபூ அய்யூப் (ரலி – ம்) முஸ்லிம் – திர்மிதி 421 அபூதாவூத்)
11 ரக்அத்கள்.
ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே… பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் தஹஜ்ஜத் ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது
நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)
எனது சிறிய தாயார் மைமுனா அவர்கள் வீட்டில் நான் ஒரு நாள் தங்கினேன் நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபியவர்களும் அவர்களின் மனைவியும் தலையணையின் சீள வாக்கில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை நபியவர்கள் தூங்கினார்கள் பின்னர் விழித்து தங்கள் கையால் முகத்தை தடவி தூக்க கலக்கத்தை போக்கிவிட்டு ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களை ஓதி விட்டு எழந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து தண்ணீர் சாய்த்து ஒளு செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக நின்றார்கள் நானும் அவர்களின் இடது புறம் போய் நின்றேன் எனது காதைப் பிடித்து இழுத்து வலது பக்கம் நிறுத்தினார்கள்.
இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மேலும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
இன்னும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மீண்டும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மறுபடியும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
பின்பு ஒற்றப்படையில் (வித்ரு) தொழுதார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 992, 1198)
9 ரக்அத்துகள்
நபி(ஸல்) ஒன்பது ரக்அத்துகளாக ஒற்றைப்படையில் (வித்ரு) தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். (இப்னு உமர்(ரலி) முஸ்லிம் நஸயி அஹ்மத்)
7 ரக்அத்கள்.
நபி(ஸல்) ஏழு ரக்அத் வித்ரு (ஒற்றைப்படையில்)தொழுதால் ஆறாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதாவூத் – நஸயி – அஹ்மத்)
5 ரக்அத்கள்.
நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். ஐந்து ரக்அத்தை ஒற்றைப்படையில்(வித்ராக) தொழுவார்கள் (அப்படி தொழும்போது) ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி – முஸ்லிம் – திர்மிதி 421)
3 ரக்அத்கள்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம், நஸயி, அஹ்மத், பைஹகி)
கிராஅத்
நபி(ஸல்) ஒற்றப்படைத் தொழுகையின்(வித்ரின்) மூன்று ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ என்ற சூராவையும், இரண்டாம் ரக்அத்தில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’ என்ற அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் ‘குல்ஹீவல்லாஹூ அஹத்’ என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என உபை பின் கஃபு(ரலி) அறிவிக்கிறார்கள். திர்மிதி 424, அஹ்மத், நஸயி, இப்னுமாஜா)
நபி(ஸல்) மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் மூன்று அத்தியாயங்கள் விதம் ஒன்பது அத்தியாயங்களை ஓதுவார்கள் கடைசி அத்தியாயாத்தில் குல்ஹூவல்லாஹூ அஹத் சூராவை ஓதுவார்கள் என்று திர்மிதியில் ஒரு செய்தி வருகிறது அலி(ரலி) அறிவிப்பதாக வரும் இச்செய்தி பலவீனமானதாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் அல் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பொய்யராவார் அதனால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.
யார் ஐந்து ரக்அத் தொழு விரும்புகிறாரோ அவர் ஐந்து தொழலாம், யார் மூன்று ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் மூன்று தொழலாம், யார் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் ஒன்று தொழலாம் என்பது நபிமொழி (அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா)
வித்ரும் மஃரிபும் வித்தியாசப்பட வேண்டும்
மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் மஃரிபைப் போன்று வித்ரை ஆக்கி விடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) ஹாக்கிம், தாரகுத்னி, இப்னுஹிப்பான்)
மூன்று ரக்அத் வித்ரு தொழும் போது எவ்வாறு தொழுவது? மஃரிபைப் போன்று வித்ரை ஆக்காதீர்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதால் வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும். முதலில் இரண்டு தொழுது ஸலாம் கொடுத்து பின்னர் ஒன்று தொழுது சிலர் வித்தியாசப்படுத்துகிறார்கள். இப்னு உமர்(ரலி) இவ்வாறு தொழுதுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்னு உமர் அவர்கள் இவ்வாறு தொழுதது உண்மைதான் (புகாரி991) ஆனால் அவர்கள் தொழுத மூன்று ரக்அத்தையும் சேர்த்து அவர்கள் வித்ரு என்று சொல்லவில்லை. இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து பிரித்ததன் மூலம் அது மூன்றாம் ரக்அத்துடன் சேராது என்பதை விளங்கலாம். பின்னர் தொழுத ஒரு ரக்அத் மட்டுமே (ஒற்றையாக இருப்பதால்) வித்ரு தொழுகையாகும்.
ஹனபி மத்ஹப் காரர்கள் போன்று தொழுவதற்கும் ஆதாரம் எதுவுமில்லை. இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதுவதன் மூலம் அவர்கள் வித்ரை மஃரிபு போன்றே ஆக்கி விடுகிறார்கள். மூன்றாம் ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு கைகளை உயர்த்துவதால் மட்டும் அது மஃரிபிலிருந்து வித்தியாசப்பட்டு விடாது.
மூன்று ரக்அத் தொழும் போது நபி(ஸல்) எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறு தொழுவதே சரியாகும்.
நபி(ஸல்) மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத்தில் தான் உட்காருவார்கள் ஸலாம் கொடுப்பார்கள் என ஆய்ஷா – உபை பின் கஃபு (ரலி-ம்) அறிவிக்கிறார்கள். (நஸயி)
இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து பிரிக்காமல், அத்தஹிய்யாத்து ஓதாமல் நேராக எழுந்து மூன்றாம் ரக்அத்தையும் தொழுது இறுதியில் ஸலாம் கொடுப்பது தான் நபிவழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வித்ரு தொழுகை மஃரிபு தொழுகையிலிருந்து வித்தியாசப்பட்டு விடுகிறது.
1 ரக்அத்.
இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் நபி(ஸல்) தொழுதுள்ளார்கள் என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் இல்லை.
13 ரக்அத்களை விட அதிகமாக தொழவேக் கூடாதா…?
தொழலாம் தடையில்லை ஆனால் நபி(ஸல்) அவ்வாறு தான் தொழுதுள்ளார்கள் என்று (பொய்) கூறி அந்த கூடுதல் ரக்அத்களை சுன்னத்தாக்கக் கூடாது.
இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டிரண்டு ரக்அத்களாக தொழு. சுப்ஹ் வந்து விட்டால் ஒரு ரக்அத் தொழுது முடித்துக் கொள்’ என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி)
எண்ணிக்கையை வரையறுக்காமல் இரண்டிரண்டாக தொழு என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் அவரவர் விரும்பும் அளவிற்கு சுப்ஹ்வரை எத்துனை ரக்அத்களும் தொழலாம். 13 ரக்அத்களை தாண்டி சிலருக்கு 30 ரக்அத்கள் தொழ விருப்பம் இருந்தால் தொழலாம். சிலருக்கு அதிகப்படியாக வெறும் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழ விருப்பம் இருந்தால் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நாற்பது – ஐம்பது என்று சுப்ஹ்வரை தொழ ஒருவர் விரும்பினால் கூட அவர் தொழலாம். அதற்கு இந்த ஹதீஸ் அனுமதியளிக்கிறது. ஆனால் பதினோரு ரக்அத்களை தாண்டி இத்துனை ரக்அத்கள் தான் தொழ வேண்டும் இருபது ரக்அத்கள் தான் தொழ வேண்டும் என்று ரக்அத்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை அவற்றை சுன்னத்தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதிகப்படியாக தொழும் தொழுகை அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததாகும்.
ஜமாஅத்தாக தொழுவது.
ரமளானில் ஏழுநாட்கள் எஞ்சியிருக்கும் வரை(அதாவது 23 நாட்கள்) நபி(ஸல்) எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. 24ம் இரவில் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் அடுத்த நாள் தொழுகை நடத்தவில்லை 26ம் இரவில் பாதி இரவு கழியும் வரை தொழுகை நடத்தினார்கள். அடுத்த நாள் தொழுகை நடத்தாமல் 28ம் நாள் தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு குடும்பத்தினரையும் – மனைவிகளையும் அழைத்தார்கள். ஸஹர் செய்தல் தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு தொழுகையை நீட்டினார்கள். (அடுத்தடுத்த நாள் தொழவில்லை) என்று ஜூபைர் பின் நுமைர் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 734)
இதே செய்தி ஆய்ஷா(ரலி) வழியாக புகாரியில் வருகிறது. மக்கள் திரண்டு தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்த போது வெளியில் வராத நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகைக்கு வந்து ”நீங்கள் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு தெரியும் ஆர்வத்தின் காரணமாக அல்லாஹ் இந்த தொழுகையை கடமையாக்கி விடுவானோ.. என்று அஞ்சி தான் நான் வரவில்லை” என்று சொன்ன செய்தி கிடைக்கிறது. (புகாரி 1129)
நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான்.
வித்ரில் குனூத்.
வித்ரில் ஓதுவதற்காக எனக்கு நபி(ஸல்) துஆவை கற்றுக் கொடுத்தார்கள் என ஹஸன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

اللهّم اهد ني فيمن هديت وعافني فيمن عافيت وتولّني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شرَّ ما قضيت فإنّك تقضي ولا يقضى عليك وإنه لا يذلُّ من واليت تباركت ربنا وتعاليت

அல்லாஹூம்மஹ்தினீ ஃபிமன் ஹதைத்த, வ ஆஃபினி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனி ஃபீமன் தவல்லைத்த, வபாரிக்லி ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ர மா க்கலைத்த, வஇன்னக்க தக்ளீ வலா யுக்ளா அலைக்க, வஇன்னஹூ லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
பொருள்: இறைவா நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும் துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன் மகத்துவம் மேலானது. (திர்மிதி 429)
இந்த துஆவை இரவுத் தொழுகையின் ஒற்றைப்படை(வித்ரு) கடைசி ரக்அத்தில் ருகூஃவிற்கு முன்போ – பின்போ அவரவர் விருப்பப்படி ஓதிக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும் நபி(ஸல்) குனூத் ஓதியதற்கு ஆதாரம் கிடைக்கின்றன. (ஹஸன் – உபை பின் கஃபு(ரலி-ம்) வழியாக ஹாக்கிம் அபூதாவூத் நஸயி)
நபி(ஸல்) குனூத் ஓதும் சந்தர்பங்களில் கைகளை உயர்த்தியதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று குனூத்திற்கு ஆமீன் சொல்வதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. மக்கா மதீனா போன்ற இடங்களில் கைகளை உயர்த்தி குனூத் ஓதினாலும் பிறர் அதற்கு ஆமீன் சொன்னாலும் நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த சந்தர்பங்களில் நாம் அமைதியாக நின்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியாகப்படுகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
இணையத்திலிருந்து
THANK S BY Engr.Sulthaner_sulthan@yahoo.com