Thursday, November 3, 2011

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.


03 NOVEMBER 2011


மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
 
இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.
"இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்." அல்குர்ஆன் 37:103-108
அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.
ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
"உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!"
அல்குர்ஆன் 108:2
இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.
"அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்."
அல்குர்ஆன் 17:46
"அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்."
அல்குர்ஆன் 39:45
இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் “கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் “பலி’ என்ற வணக்கத்தினால் பலன் என்ன?
இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர்ஆன் 60:4
"அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்." அல்குர்ஆன் 22:37
அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.

இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று கேட்டார்.
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை” என்றனர். அல்குர்ஆன் 23:23, 24
இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.
எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

நன்றி: "ஏகத்துவம்" நவம்பர் 2011

அரஃபா நோன்பு



03 NOVEMBER 2011


துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். 

"அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்."
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

"அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்." 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: இப்னுமாஜா 1722


அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.

எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.

"குர்பானிப் பிராணியின் தோல் உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்."

"ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்."
அறிவிப்பவர்: அலீ(ரலி); நூற்கள்: புகாரி (1716), முஸ்லிம் (2320) 

நன்றி: www.tntjcovai.com

வாழ்க ஜனநாயகம்!!!


கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?
 அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம்.
 இன்றைக்கு நிலவரம் என்ன? காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது.
 சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.
 அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது.
 வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
 ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர்.
 தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
 கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர்.
 ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
 நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.
 மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.
 கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
 சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.
 வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன.
 இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
 இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

First Published : 03 Nov 2011 03:55:10 AM IST

நன்றி. நல்ல கருத்துகள்
தலையங்கம்:  
Last Updated : 03 Nov 2011 04:01:31 AM IST
 

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)



தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான சலுகைகளும்வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றனஇது போன்ற சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம்சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோகபடுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்குசென்று அற்ப்ப ஊதியத்தில் குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர்ஆனால் இலவசமாக வழங்கபடும் இதுபோண்ற பயிற்ச்சிகள் மூலம் இந்தியாவிலேயே நம்மால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது என்பது அரபு நாடுகளில்படிப்பறிவில்லாமல் கஷ்ட்டபடும் எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்.??

அது போன்ற சலுகைகளில் ஒன்றான வேலை இல்லா சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளப்பு பயிற்ச்சி திட்டத்தின்அடிப்படையில் சிறுபான்மையினறுக்கு பல்வேறு துறைகளில் இலவசமாக பயிற்ச்சிகள் அளிக்கபட உள்ளன. 

இதில் ஆடை மற்றும் பின்னல் ஆடைகாலனி தயாரிப்புகம்யூட்டர் மற்றும் நெட்வோர்கிங், CAAD மற்றும் CAM , தோள் ஆடைமற்றும் பொருட்கள் தயாரிப்புபிளாஸ்ட்டிக் தொழில் நுட்பம், ஆடோமொபைல் தொழில் நுட்பம்எலக்ட்ரிகல்ஸ்ஏசி மற்றும்பிரிட்ஜ் மெகானிக், மென்பொருள் சேதனையாளர் தொடர்பான 10 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான பயிற்ச்சிகள்இலவசமாக அளிக்கபட உள்ளன.

வழங்கப்படும் பயிற்ச்சிகள மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்.
1.Apparel Training & Design Center
18-23, Readymade Garment Complex,Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22500121 / 22501221

Name of the Course
Duration
Qualification
Apparel Manufacturing Technology(AMT)
12 Months
10th Pass
Diploma in Knitwear Manufacturing Technology(DKMT)
12 Months
10th Pass
Apparel Pattern Making(APM)
6 Months
8th Pass
Smart Operator Courses SO-B
45 Days
5th Pass

2.Central Footwear Training Institute
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22501529

Name of the Course
Duration
Qualification

Shoe CAD
1 Month
8th Pass / Fail with Shoe Design Knowledge
Certificate of Footwear Manufacturing
12 Months
10th Pass / Fail

3.National Small Industries Corporation Ltd(NSIC), 
Sector B-24, Guindy Industrial Estate, 
Ekkaduthangal, Chennai - 600032

Name of the Course
Duration
Qualification

Advanced Embedded System Integrated with Softskills
2 Months
Final Year / Passed out students of Diploma / Degree in ECE, EEE, IT, E&I, CSE
Advanced Networking Using CISCO Router integrated with softskills
2 Months
Final Year / Passed Out Student of any degree
CNC Programing & Operation & CAD/CAM using unigraphics softwre
3 Months
Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
3D Modeling Design Using Auto CAD integrated with softskills
2 Months
Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
PLC, AC Drives & Control Panel Integrated with softskils
2 Months
Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
Computer Aided Design Using Unigraphics & Pro-E Software integrated with softskills
2 Months
Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI

4.National Institute of Fashion Technology,
NIFT Campus, Rajiv Ghandhi Salai, Taramani, Chennai - 600113
Telephone : 044-22542756 / 22542768
Name of the Course
Duration
Qualification

Certificate Cource in Retailing
3 Months
Gratuate in any Discipline
Leather Goods Designing  & Production Technology
6 Months
+2 Pass
Fashion Retails Managemant
6 Months
+2 Pass

5.Central Institute of Plastics Engineering & Technology(CIPET), Guindy, Chennai - 600032
Name of the Course
Duration
Qualification

Plastic Processing Machine Operator(PPMO)
6 Months
10th Pass / Fail
Injection Moulding Machine Operator(IMO)
6 Months
10th Pass / Fail
Plastic Processing Technology(PPT)
6 Months
Any Degree

6.National Film Developement Corporation Ltd(NFDC), 
1st Floor, Co-Optex Warehouse Building
350, Pantheon Road, Egmore, Chennai - 600008
Telephone : 044 - 28192506/28192407/28191427
Name of the Course
Duration
Qualification

Multimedia(Photoshop, Illustrator, Coreldraw & Flash)
1 Month
10th & above
Digital Still Photography
1 Month
10th & above
Animation (3D Studio Max)
1 Month
10th & above

7.Micro Small & Medium Enterprises(MSME Developement Institute)
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 25501011
Name of the Course
Duration
Qualification

Advaced Automobile Technology
3 Months
10th Pass
Air Conditioning & Refrigeration
1 Month
10th Pass
Electrical Course
3 Months
10th Pass
Industrial Control Automation
2 Months
ITI, Diploma
Software Testing
10 Days
Degree / Diploma

இந்த பயிற்ச்சியில் சேருவதற்க்கான தகுதிகள்:

  • பொற்றோரின் ஆண்டி வருமானம் 1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயிற்ச்சிக்கு விண்னப்பிப்பவர்கள் இஸ்லாமிய‌,கிருஸ்த்துவபுத்த மற்றும் பார்சீய மதத்தை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
தேவையான ஆவணங்கள்
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைபடங்கள்
  • சாதி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • 10 ஆம் பகுப்பு மதிப்பென் சான்றிதழ் / பள்ளி இறுதி சான்றிதழ்
  • பட்ட படிப்பு அல்லது பட்ட மேற்ப்படிப்பு சான்றிதழ் / கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் முந்தைய பருவ தேர்வின்மதிப்பென் சான்றிதழ்
  • கல்லூரி மாற்று சான்றிதழ்

தகுதிக்கு ஏற்ப்ப பயிற்ச்சியை தேர்ந்தேடுத்து அதற்க்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

பயிற்ச்சிகான நேர்காணல் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்:

மேல் குறிப்பிடபட்டுள்ள 7 நிறுவனங்களிலும் அந்த நிறுவனங்களில் அளிக்கபடும் பயிற்ச்சிகளுக்கான நேர்காணல் நவம்பர் 3மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும்.

நேர்காணலின் போது மேல் குறிப்பிடபட்ட ஆவணங்களின் அசலை கொண்டு செல்ல வேண்டும்.

படிப்பை பாதியில் கைவிட்டு அடுத்து வெளி நாடுகளுக்கு போகலாம என்று எண்ணிக் கொண்டு இருக்கும் என் சமுதாயஇளைஞர்களே சிந்தியுங்கள் நமக்கான கதவுகள் இந்தியாவில் திறந்து உள்ளன பலவகையான வழிமுறைகளும் பயிற்ச்சிகளும்இந்தியாவிலேயே உள்ளனஇவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெற்றோர் உற்றார் உறவினர்களை பிறிந்து அர்ப்ப ஊதியத்தில்அயல் நாட்டு வேலை தேவை தானா ???

வலிமையான கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க கலமிறங்குங்கள் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறையைவெற்றி தலைமுறையாக மாற்றலாம் !!
 THANK S BY 
பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA
டி.என்.டி.ஜே மாணவர் அணி