Friday, December 30, 2011

நவீன உலகின் பெற்றோர்களே….கவனியுங்கள்! ஒரு விழிப்புணர்வு பார்வை!



இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் அதிக வேலை வாய்ப்புக்கள் இருக்கும்ஒரு துறையாக கணிணி சார் பணிகளே இருக்கின்றன. வன், மற்றும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியங்களை கணக்கில் கொண்டு பார்த்தோமானால்அது மற்ற துறைகளில் இருப்பவர்களின் சம்பள விகிதகங்களோடு ஒப்பிட்டுபார்க்கவே முடியாத உயரத்தில்தான் இருக்கிறது.
இப்படியாக அதிக ஊதியம் பெறும் கணிணி சார்ந்து வேலை செய்பவர்களின்செலவிடும் வேகமும் வாங்கும் திறனும் தன்னிச்சையாக கூடித்தான்போகின்றன். இந்த வாங்கும் திறன் அதிகரிக்கும் போது அது எப்படி அவர்களின்குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற ஒரு பார்வையை இந்தக் கட்டுரையின் மூலம்பதிகிறோம்.
கட்டுரைக்குள் செல்வோமா ….!!!
இன்றைய கணிணி யுகம் இந்தியாவில் மிக அருமையாக வளர்ந்து கொண்டுஇருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்னும் பலமாக முன்னேறிவருகிறது. வன்-மென் பொறியாளர்களின் சம்பளம் வியக்க வைக்கும் அளவுக்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். குறிப்பாக இவர்கள் சிறுவயதிலேயே மிக பெரிய அந்தஸ்த்தை இதன் மூலம் அடைந்து விடுகிறார்கள்
நடுத்தர குடும்ப பெற்றோர்கள், ஒரு வீடு பைக்,கார், இன்னபிற வீட்டு உபயோகபொருட்களை அடைய எவ்வளவு காலத்தினை எடுத்துக்கொண்டார்கள்.. ??? அவர்களின் வாழ்க்கை தரம், மற்றும் காலத்தின் கட்டாயம் அந்த மாதிரி இருந்தது…
முன்பெல்லாம் நாம் பெற்றோரிடம் சிறிய அளவிளான விளையாட்டு சாமான்வாங்க எவ்வளவு போராடுவோம்…அதுவும் கிடைத்தால் தான்போச்சு….இல்லையென்றால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய் விடும். மற்ற பிள்ளைகளின் விளையாட்டு சாமான்களை ஏக்கத்தோடு பார்ப்போம். இந்தமாதிரி அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்ப்பட்டிருக்கும் …
போகட்டும் ….
இன்றைய கணிணி பொறியாளர்கள் மிக சிறிய வயதிலேயே எல்லாவசதிகளையும் பெற்று விடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே வீடு,,கார்,,வங்கி சேமிப்பு ,,என்று எல்லாம்வாழ்க்கையில் ஒரு பொருளாதார மேம்பாட்டினை அடைந்து விடுகிறார்கள்.
பிறகு திருமணம், குழந்தைகள் ….
இங்க தாங்க நாம விஷயத்துக்கு வருகிறோம் ….
பெரும்பாலும் கணிணி பொறியாளர்களின் மனைவியரும் இதே துறையில்வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்.
(அல்லது இல்லத்தரசிகளாகவும்,வேறு ஏதோ துறையைச் சேர்ந்தவர்களாக கூடஇருக்கலாம்)இவர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை சற்றே கவலை அளிக்ககூடியதாக உள்ளது ….
தற்பொழுது இத்துறையில் பணி புரியும் நண்பர்கள் பணிச் சுமை காரணமாக – வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழும் நேரம் குறைந்து விட்டது என்பதை நாம்அனைவரும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அதனால் குழந்தைகளிடம் செலவழிக்கும் நேரமும் குறைந்து விட்டது. அதனால் குழந்தைகளின் விருப்புவெறுப்புகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரமும் குறைந்து விட்டது…
குழந்தைகளின் தேவைகள் பற்றிச் சிந்திக்க நேரமில்லாமல் அவர்கள் கேட்டதை, கேட்ட உடனேயும், கேட்பதற்கு மேலேயும் உடனேயே வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளின் மீது இருக்கும் பாசமும், தன்னிடம் இருக்கும்வாங்கும் திறனும் அதிக விலைகளைப் பற்றியெல்லாம் கவலைகள் கொள்ளவைப்பதில்லை.
இவர்களுக்கு இருக்கும் வேலை பளு மற்றும் மற்ற குறிக்கோள்கள் நோக்கியபயணத்தால், தங்களின் பாசத்தையும் அன்பினையும் தங்களின் குழந்தைகளுக்குகாட்ட அதிகமான செலவுகள் செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களைவாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள்.
இப்படி வளரும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்????
எல்லாமே எளிதாக கிடைக்கும் போது இந்த குழந்தைகள் என்ன நினைக்கும்???
இந்த குழந்தைகளிடம் போராட்ட குணம் இருக்குமா???
மனோதத்துவரீதியாக யோசித்து பாருங்கள்….
மற்ற பிள்ளைகளோடு எந்த அளவுக்கு இவர்கள் போட்டி போட்டு வளர்வார்கள்???
போராட்ட மனப்பான்மை இல்லாமலே ஒரு தலைமுறை வளர்ந்து வருவதுகவலைக்குரிய ஒரு விசயம்தானே…?
இப்படியாக வளரும் பிள்ளைகளிடம் வாழ்க்கை பற்றிய ஒருவித அலட்சியமனப்பான்மை வந்துவிடுவதோடு, தன்னைச் சுற்றி இருக்கும் எதுவும் எளிதாய்கிடைத்து விடுமென்ற ஒரு மனோநிலை அவர்கல் அறியாமலேயே அவர்களின்ஆழ்மனதில் பதிந்தும் விடுகிறது. எதுவாக இருந்தாலும் நம் பெற்றோர்கள்பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒரு எண்ணம் மேலோங்கியே இருப்பதால், தங்களின் எல்லா தேவைகளுக்குமே பெற்றோரைச் சார்ந்தே அதுவும் சிறிய சிறியவிடயங்களுக்காக கூட எதிர்பார்த்து நிற்கும் ஒரு நிலையும் ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இவர்களால் ஒரு சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ளமுடியாமல் மனதளவில் சுருண்டு விடுகிறார்கள்..இவர்கள் பெரியவர்கள் ஆனாபிறகு எந்த அளவிற்கு இந்த உலகத்துடன் போட்டி போடுவார்கள்??? கடுமையானபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் போரட்டாக் குணம் இல்லாமல் எப்படிவெல்வது? சின்ன சின்ன தோல்விகளை எப்படி தாங்குவது. வெற்றிகள் எல்லாம்சுகமானவைதான் ஆனால் தோல்விகள்தானே மனிதனைப்பக்குவப்படுத்துகின்றன…?
அன்பர்களே, குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் இரு வேறு கருத்துக்கள் நமக்கு இல்லை, ஆனால் அதை ஒரு அளவோடுசெய்வதோடு கஷ்டப்படாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதையும் புரியவையுங்கள்….
கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது. வரும் காலம் கடும் போட்டிநிறைத்த காலம் நண்பர்களே…!!! நம் குழந்தைகளை போட்டி நிறைந்த உலகத்துக்கு தயார் படுத்துங்கள் ….!
ஏன் கணிணிதுறையில் உள்ளவர்களின் குழந்தைகளை மட்டும்குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று நீங்கள கேட்பது புரிகிறது. மற்ற துறைகளில் பணிபுரிந்து அதிக ஊதியம் வாங்குபவர்களின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் உண்டுதான்….
ஆனால் மிகையாக வேலை வாய்ப்புக்களும் அதிக ஊதியமும் கிடைப்பது கணிணித் துறையில்தான் என்பதால் கணிணித் துறையை மையமாக வைத்துகட்டுரை செய்துள்ளோம். மற்ற படி பிள்ளைகளுக்கு கேட்ட விலையைப் பற்றி கவலை கொள்ளாமல் உடனே உடனே அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் எல்லா பெற்றோர்களுக்கும், இந்தக்கட்டுரை பொருந்தும்.
Thanks By http://udayanadu.wordpress.com/ - கழுகு

No comments:

Post a Comment