Wednesday, April 13, 2011

முகவை சேக் வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு கடிதம்:


வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு கடிதம்:)
நண்பனே, இறைவன் உனக்கு நல்ல சிந்தனையை கொடுக்க பிரார்த்திக்கிறேன். உண்மையில் உன்மீது எனக்குக் கடும் கோபம், வீட்டிற்கு போன் செய்தபோது அம்மா சொன்னார்கள் " நீ இன்று என் வீட்டிற்கு பயணம் சொல்ல வந்தாயாம்.இது ஆறாவது முறை ! மீசை முளைக்காத வயதில் கண் கலங்க வார்த்தைகளை மென்று முழுங்கி முதன்முதலாக "வெளிநாடு போகிறேன்" என்று பயணம் சொல்ல வந்தாய்.பதினான்கு வருடத்திற்கு பிறகு இன்றும் பயணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய். இன்னும் எத்தனை முறை பயணம் சொல்வாய்..? 14 வருடமாக அப்படி என்னதான் சம்பாதித்து விட்டாய் ? உன் திறமைக்கும்,உழைப்புக்கும்,படிப்பிற்கும் இங்கேயே 14 வருடத்தில் நிறைய சம்பாதித்திருக்க முடியும். முதன் முதலாய் திரும்பி வந்தபோது உன் அம்மாவின் நோயையும் அவர்கள் படும் கஷ்டத்தையும் அருகிலிருந்து பார்த்த பிறகும் கூட நீ விடுமுறை முடிந்து போனாய்....கல்நெஞ்சக்காரன் நீ....! அதற்கடுத்து ஏதோ ஒரு விடுமுறையில் நீ வரும்போது உன் அப்பா இல்லை. உன்னைத் தூக்கி வளர்த்த உன் அப்பாவின் மரணத்திற்கு தொலைபேசியில் கதறினாய்.ஒரு வாரமாய் சாப்பிடாமல் தவித்தாய்..இதுதான் பெற்றோருக்குச் செய்யும் கடமையா ..? கடைசி காலத்தில் மருந்து கூட வாங்க ஆளில்லாமல் பிள்ளையிருந்தும் அனாதையாய்தான் இறந்து போனார்.அவரின் பிணத்தை கூட உன்னால் பார்க்க முடியவில்லை. கோடி ரூபாய் அப்பா,அம்மாவிற்கு அனுப்பினாலும் கடைசி காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு உன் வெளிநாட்டு வாழ்க்கை என்ன பதில் தரும் ? உன் தங்கச்சி படிப்பிற்கும் பணம் அனுப்பினாய் ,திருமணத்திற்கு நகை,பணம் தந்தாய். அன்பும்,அரவணைப்பும் இல்லாத பாசங்களை காகிதத்திலே பரிமாறும் உறவாகி நிற்கிறாள் அவள். நண்பா, கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ..! ஆனால் உன்னையே வாழ்க்கை என்று வந்த மனைவியை விட்டுவிட்டு 45 நாட்களில் வெளிநாடு போனாய்.எப்படிடா மனம் வந்தது ? நீ கோபப்பட்டாலும் சரி..உன் மீது உரிமையுடன் கேட்கிறேன்..எதற்காக திருமணம் செய்தாய் நீ ? 45 நாட்கள் அன்பையும்,பாசத்தையும் அள்ளி அள்ளித் தந்து விட்டு ஏங்கித் தவிக்க பறந்து விட்டாயே..! பணம் மட்டும்தான் வாழ்க்கையா ? எல்லாவற்றையும் விடு இந்த முறை உனக்கான ஒரு வாரிசு...! அந்தப் பிஞ்சு முகத்தை மறந்து செல்லத் துணிந்து பயணம் சொல்ல வந்திருக்கிறாய்.அன்புக் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்புக்கு...உன் லட்சங்கள் தூசுதான். நீ உயிரோடிருந்தும் உன் குழந்தை தந்தையின் அரவணைப்பு,கணடிப்பு,அறிவுரையில்லாமல் வளரப் போகிறது. வேண்டாம் நண்பனே...! இப்படிச் சம்பாதிக்கச் சொல்லி யாரும் உன்னை நிர்பந்திக்கல..! சென்னையில் கூட என்னால் இருக்க முடியவில்லை,நம் மண்னைத் தேடுகிறது, நம் ஊர் காற்றுக்கு உயிர் ஏங்கி தவிக்கிறது.அம்மாவின் மடியில் தலை வைத்து ஊர் கதை கேட்க ஆவல் கொள்கிறது.அப்பாவிற்கு சொடக்கு விட..தம்பியை அதட்டி படிக்க் சொல்ல...தெருவில் உள்ளவர்களுடன் உறவாட.... இதற்கெல்லாம் எத்தனை கோடி ஈடாகும்..? அப்பா,அம்மா,மனைவி,மக்கள்,குடும்பம்,சொந்தம்,கா தல், கனிவு, சுற்றம்,பந்தம்...எல்லாவற்றையும் விட..இளமையைத் தியாகம் செய்து விட்டு...எத்தனை...எத்தனை...நண்பர்கள் நம்மூரிலே...! 14 வருடத்தில் 6 விடுமுறை ! ஒரு விடுமுறைக்கு 2 மாதம் வீதம் 1 வருடம் ஊரோடு இருந்திருக்கிறாய்.13 வருடம் அகதியாய் வாழ்ந்திருக்கிறாய். இம்மண்ணின் மைந்தன் நீ! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது! உன் வாழ்வுக்கா இங்கு வழியில்லை? ஊரிலே நல்லதொரு தொழில் தொடங்கு அல்லது உன் படிப்புக்கு வேலை தேடு .கால் வயிறு கஞ்சின்னாலும் மனம் நிறைஞ்சு வாழணும்... உன் பயணத்தை ரத்து செய்..ஊரில் தொழில் துவங்கு...உன் முதல் பார்ட்னர் நான்..! மற்றவை நேரில் பேசுவோம்...போய் விடாதே! நான் வரும்போது நீ ஊரில் இருக்கணும்..?! எதிர்பார்ப்புடன் உன் நண்பன் முகவை சேக்>>>
Photos: 1



  • Yousuf Ansari ‎,நம் நாட்டிலேயே வாழ வழி செய்வோம்
    2 seconds ago · 
Photos: 1
02 April at 09:32 ·  ·  · Share
  • 20 people like this.
    • முகவை சேக் 
      இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
      வந்தவனுக்கோ சென்று விட ஆசை
      இதோ அயல்தேசத்து ஏழைகளின்
      கண்ணீர் அழைப்பிதழ்!

      ...See more
      02 April at 09:35 ·  ·  5 people
    • முகவை சேக் 
      ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்

      என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

      தொடமுடியாத தூரத்தில் நீ
      ...See more
      02 April at 09:53 ·  ·  2 people
    • Hameed Rh NALA KELAPURANGAPA PEETHIYAAAAAAAAAAAA
      02 April at 09:54 ·  ·  1 person
    • Abthul Hakkeem 
      எதற்க்காக நண்பா இங்கே அள்ளல் படுகின்றோம். கவிதை எழுதுபவனுக்கு எங்கள் நெஞ்சுனில் கள் மட்டும் தான் தெரியும் ஆனால் அந்த கள்ளிணை தட்டுகின்ற உளிகள் தானடா குடும்ப பொறுப்பு. குடியுரிமை பெற்ற நாட்டினில் இல்லையடா சம உரிமை. விழுக்காடு தருகின்றோம் என்...See more
      02 April at 09:56 ·  ·  4 people
    • Mohideen Vps Mujib Bhai, Arumaiya Irukku, Enna roomu poddu yusykriyolo
      02 April at 10:12 ·  ·  1 person
    • முகவை சேக் 
      மணம் வீசும்

      மண வாழ்வில்

      மணாளனாய் நீ எனக்கு;
      ...See more
      02 April at 10:50 ·  ·  3 people
    • Hameed Rh adddddddddd aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
      02 April at 10:50 ·  ·  2 people
    • Riyas Khan dear brother unarvu poorvamana sinthanai, ellorum yosikka vendiya unmai including me, so thanks for this
      02 April at 11:00 ·  ·  3 people
    • முகவை சேக் 
      அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

      நட...See more
      02 April at 11:39 ·  ·  2 people
    • Hameed Rh SHEIK ANNE IPO NEEGA ENATAHN SOLA,VARINGA
      02 April at 11:39 ·  ·  2 people
    • முகவை சேக் pottiyai kattu
      02 April at 11:41 ·  ·  2 people
    • Hameed Rh ha aaaha aha
      02 April at 11:45 ·  ·  2 people
    • முகவை சேக் 
      அன்னை தேசத்து
      அகதிகள் நாம்
      எண்ணெய் தேசத்தில்
      எரிந்துக் கொண்டிருக்கிறோம்.

      ...See more
      02 April at 13:30 ·  ·  1 person
    • Hameed Rh adaaada intyha pochi tolai tanga mudiyalai ..nama suma irundalum ada ida solli ooru nabagata kelapi vidudu
      02 April at 13:31 ·  ·  1 person
    • Iniyavan Thanjai 
      மிகவும்...அருமை....!
      நாம் தான்....இந்த கவிதை மாதிரி வாழ்ந்து கொண்டியிருக்கிறோம்...!
      அப்புறம் எதற்கு இந்த கவிதை...என்று ...நான் எழுத விரும்பவில்லை...!

      எத்தனை எத்தனை....வசைகள் பாடினாலும்... எத்தனை எத்தனை கேலிகள் செய்தாலும்...
      ...See more
      02 April at 14:23 ·  ·  3 people
    • முகவை சேக் 
      கணவா!

      இரண்டு மாதம் மட்டும் ஆடம்பர உறவு உல்லாச பயணம்..

      பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
      ...See more
      02 April at 14:37 ·  ·  2 people
    • Ahamad Basha நானும் மனிதன்தானே கலங்கிய கண்களோடு நான்....!!!
      02 April at 14:47 ·  ·  3 people
    • முகவை சேக் அஸ்ஸலமு அலைக்கும் சகோதரர்களே!நமக்கு என்று பிறக்கும் விடியல்! இந்த கஸ்டங்கள் அனைத்தும் நம்மோடு போகட்டும்! இனி வரும் சந்ததிகளாவது நலம் பெற்றிட அல்லாஹ்விடம் துவா செய்து கொண்டு........இடஒதுக்கீடு மேலும் உயர்த்தி தர சம்மத்திருக்கும் திமுக கூட்டணிக்கு நம் வாக்குகளை அளித்து ..அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்போம்!
      02 April at 15:11 ·  ·  1 person
    • Abdul Rasheed Mohamed மிக சரியான வார்த்தைகள்.நாம் ஒவ்வொருவரும் நம் வருங்கால தலைமுறைக்கு கல்வியின் அவசியத்தினை உணர்த்தி அவர்களை ஊக்கப்படுத வேண்டும்.அப்போதுதான் இன்றைக்கு நாம் மனைவி மக்க்ளை பிரிந்து இளமையை வீணாக்கும் அவல நிலை நம் தலைமுறையோடு ஒழிந்து போகும் இன்ஷா அல்லாஹ்
      02 April at 15:35 ·  ·  2 people
    • Abthul Hakkeem யாராவது சொந்தமாக தொழில் தொடங்குங்கள். அல்லா்உற்வின் ஆணைகளுக்கு பயப்பட்டு தொடங்குங்கள். அணைவரும் ஒன்று சேருங்கள். சிறிய அளவினில் தொடங்குங்கள். அல்லா்உற பரக்கத் செய்வான். அரிசி. பால் இது போன்ற அத்தியாவசிய பொருட்கள் நன்றாக விற்ப்பணை ஆகும். தங்களது சிந்தணைகளை இங்கே பகிருங்கள். அல்லாஉற் நல்லதொரு முடிவினை தருவான்.
      02 April at 19:08 ·  ·  3 people
    • முகவை சேக் Good Advise brother....
      02 April at 19:09 · 
    • Mohamed Rafi இதே போன்று பல கன்டுவிட்டேன் இதை யாரும் விரும்பி ஏற்கவில்லை.ஹைர்!அடுத்த தலைமுறையாவது ஊறிலேயே வாழ பாடுபடுவோம்
      02 April at 21:02 ·  ·  1 person
    • முகவை சேக் இன்ஷா அல்லாஹ்!!!!!!!!!!!
      02 April at 21:02 · 
    • Bathurudeen Bathuru நாம் கஷ்ட படுவதை போல அடுத்த தலை முறையினர் கஷ்ட பட கூடாது ,,,இட ஒதுக்கீட்டை கேட்டு பெறுவோம் ,,நம் நாட்டிலேயே வாழ வழி செய்வோம்
      03 April at 00:40 ·  ·  5 people
    • முகவை சேக் இன்ஷா அல்லாஹ்!!!!!!!!!!!
      03 April at 00:41 ·  ·  2 people
    • Raja Mohamed insha allah
      03 April at 19:35 ·  ·  1 person
    • Mohamed Aslam yanakku yathavathu sollunga
      03 April at 23:09 ·  ·  1 person
    • முகவை சேக் இட ஒதுக்கீட்டை கேட்டு பெறுவோம் ,
      03 April at 23:46 · 
    • Nallavan Athiyuthu Shaj yes kalviyil munnerinaal namathu samuthaayam ninaitthathu nadakkum!!!
      03 April at 23:50 ·  ·  1 person
    • முகவை சேக் இன்ஷா அல்லாஹ்!!!!!!!!!!!
      03 April at 23:53 ·  ·  1 person

1 comment:

  1. முகவை சேக் அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

    நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

    "பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

    தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு தெரிவித்தார்.
    02 April at 11:39 · Like · 2 people

    ReplyDelete