பாதாம் ஃபிர்னி | ![]() | ![]() |
அறுசுவை - துரித சமையல் | ||||||||||||||||||
செவ்வாய், 31 ஆகஸ்டு 2010 00:00 | ||||||||||||||||||
![]() தேவையானப் பொருட்கள்:
ஆயத்தம்: 1. பாஸ்மதி அரிசியக் களைந்து 20 நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 2. மூன்று பருப்புகளையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிய விட்டு, பாதாம் பிஸ்தா இரண்டையும் தோல் நீக்கவும். 3. மூன்று பருப்புகளிலும் பாதியை எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும். 4. மீதியை மெல்லிய இழைகளாக கத்தியால் சீவிக்கொள்ளவும். 5. ஒரு ஸ்பூன் நெய்யில் பருப்பு இழைகளை 2 நொடிகள் பிரட்டி எடுக்கவும். செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசியையும், நீரையும் கலந்து அடுப்பை மிதமான தணலில் வைத்து விடாமல் கட்டித்தட்டாமல் மாவு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் விட்டாலும் கட்டியாகிவிடும். மாவு வெந்து இறுகி வரும்போது பால்,அரைத்துவைத்துள்ள விழுது, மில்க் மெயிட் எல்லாம் சேர்த்து கிளறவும். மிகவும் கெட்டியில்லாமல் தளர இருக்க வேண்டும்.இரண்டு கொதிவந்ததும் சர்க்கரையைக் கலந்து கொதித்ததும் நெய்யில் புரட்டியதைக்கலந்து இறக்கவும். ஃபிர்னி மீடியம் அடர்த்தியில் இருக்க வேண்டும். சுவையான ஃபிர்னி ரெடி பிரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாற, சாப்பிடுபவர்கள் எல்லாம் குளிர்ந்து போவார்கள். பிறகு என்ன பாராட்டு மழையில் நீங்களும்தான்! குறிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 பேருக்கு போதுமானது. எண்ணிக்கைக்கு ஏற்ப அளவைக் கூட்டிக்கொள்ளலாம். சிரமம் பார்க்காமல் மாவை கட்டித் தட்டாமல் கிளறுவதில் தான் சுவையே இருக்கிறது. ஆக்கம்: ஆர். நூர்ஜஹான்ரஹீம் (கல்லை)
|
No comments:
Post a Comment