Tuesday, February 22, 2011

கலரி சோரும், கலாட்டாவும்....!

அதிரைநிருபர் குழு | Saturday, October 02, 2010 | crown , நினைவுகள்http://adirainirubar.blogspot.com


என்னடா மாப்ள இன்னக்கி பள்ளி வாசல்ல இவ்வோ கூட்டம். வேரெ எதுக்கு காதர் சாயிபு காக்கா வீட்ல அவர் மொவனுக்கு சின்னத்து சாப்பாடு, நா கூட அங்க தான் போறேன் .உங்க ஊட்ட கூப்பிடலேயா? எங்க உம்ம சொல்லல மாப்பள.

நா, அஸ்லம், செய்புதீன், குஞ்சி, நைனா எல்லாரும் போரோ(ம்). எங்க சகனுக்கு ஆள் இருக்கு! நீயும் வரண்டா வாடா!

கூப்டாம எப்படிடா வரது. நீ எப்பவும் கூப்புட்டுதான் போவியா? டேய் சும்ம விளையாடாதே! சும்ம விளயாட்டுக்கு சொன்னா கொச்சுக்கிரிய மாப்ள இல்ல மாப்ள நான வெயிட் பன்றெ(ன்) , பசங்கல நிறுத்தி வக்கிரெ(ன்) நீ உங்க உம்மாட்ட சொல்லிட்டு வா.

உங்க உம்மா மரந்திருப்பாங்க! அது எப்டிடா உங்க ஊட்ட கூப்புடாம இருப்பாங்க? நாம ஒரே தெரு ஆனாக்கா பழஞ்செட்டி தெருவுல யெல்லம் கூப்புட்டு இருக்காக இவ்ளொ தூரத்துல கூப்டிகும்போது, அதும் சொல்ல போன நீங்க தாயபுள்ள.

மாப்ள ஜமாத் வய்க போராங்க தொலுதோனி துவா கேக்காம நீ உன்க உம்மாட்ட கேட்டுட்டு உங்க வூட்டு வாசல்லஇரு. பசங்கள கூட்டிட்டு நாவரேன்.

(நா சொன்னமாரி இக்பால் ஊட்ட கூப்புட்டத அவன் உம்மா மறந்துட்டாங்க நாலைக்குதா(ன்) கலரின்னு நினச்சுக்கிடாங்கலாம்)

மாப்ள கைய குட்ரா, உம்மாத(ன்) மரந்துடிச்சு நீ சொன்னது சரிதான்டா
போலாம மாப்ள! (மற்ற கூட்டாளிங்க இக்பால்ட வாழ்துச் சொல்றான்க!ஏதோ படிப்புள பஸ்ட் வந்தவனுக்கு சொல்ற மாரி) அடிசுவுடு மச்சான் ,கலகிடனுன்டா (என்னத?).

டேய் செய்பு ,இக்பால் சகனுக்கு எக்ஸ்ட்ரா அதனாலெ நம்ம பசங்க யாராச்சும் வரலேனாக்கா 3 பேரா உக்கருவோ(ம்)!

என்ன சொல்ரானுவன்னு பாப்போ(ம்).

மச்சான் சொன்னா சரிதான் - சைபு(தீன்).

(அனைவரும் சின்னத்து வீடு அடைறாங்க .வாசல்ல வரவேக்க அங்க ஊட்டு காரங்க யாருமில்ல கபீராக்க மட்டும் எம்.ஆர்.ராதா குரலில் கத்திக்கிட்டு இருக்கார்).

தம்பி! அந்த ஊட்டுக்கு போங்க இங்க புல்லாகிடுச்சி.. (அனைவரும் காதர் சாகிபு காக்கா வீட்டு அடுத்த வீட்டு ஹால்ல போய் உக்காருராங்க.)

மாப்ள இன்கெய உக்கராலான்டா - குஞ்சி.

பேப்பர் போட்டாங்க, டேய் எக்ஸ்ரா பேப்பர் கேளூ, கைய துடைக்க வேனு(ம்)-நான் .

சமர்த்தா ரெண்டு சகனுக்கு 3 பேரா குக்காந்து, என்ஸ்ரா பேப்பர் கைதுடைக்க வாங்கி ஜமுகமா மடிச்சி, சதுரமா 4 பீஸா கிழிச்சி, எக்கல்ல ஆளாலுக்கு வச்சிக்கிட்டோம்.

அஸ்லம் சோறு வருதுடா அத வாங்கு.

மாப்பிள இங்க எங்களுக்கும் சொல்றா - இக்பால்.

நீ யே கேலுடா, இது என்ன காலெஜ் சீட்ட நா வாங்கி தரத்துக்கு - நான்.

(எல்லாரும் இக்பாலப் பாத்து சிரிகிராங்க ஒரே சத்தம், 4 சகன் தள்ளி அப்பாத்துர மாப்ள சரியா சொன்னேடான்னு எனக்குப்பாராட்டு.அதற்குள்ள இக்பால் சகனுக்கு சாப்பாடு வந்துரிச்சி), மாப்ள தண்னீ பாக்கெடு இல்லடா! - அஸ்லம்.


''மத்தெதெல்லாம் இருக்கானுப்பாரு அது மரு சோரு சகன இருக்கப்போது'' மருபடியும் நான் இப்படிசொன்னதும் ஒரே சிரிப்பு.

சைபுக்கு பொற ஏறிக்கிடுச்சி னெஞ்ச் புடிச்சபடி- டே தண்ணி பாக்கட்ட ஒடைங்கடா நெஞ்சு அடைக்குது.(கண்ணீர் வடிந்தது சைபுக்கு)

மாப்ள தலைல தட்டுடா - குஞ்சி.

ரொம்ப தட்டாத மூள கலங்கிடும் - இக்பால்,

அவனுக்கு அது இருந்தாதானே ? நான்,

?????????( கெட்ட வார்தைங்க! வட்டார ஸ்பெசல்). சைபு

கம்கட்ல பேப்பர் கட்டோட சுத்திக்கிட்டு இருந்த கபிர் காக்காகிட்ட இந்தாங்க காக்கா என்க சகனுக்கு தண்ணி பாக்கெட் வய்கல - இக்பால்.

மூணு, மூணு பேரா உக்கந்துட்டு தண்னி பாக்கெட் வேனுமா! (கபிர் காக்கா முனங்கலாக மறுபடியும் எம்.ஆர். ராதா குரலில்).

''அவர் கபிர் காக்கா யிலாடா கர்னாடக காக்கா'' (கடசி சகனிலிருந்து அப்துல் காதர் காக்கா சேட உட) மருபடியும் ஒரே சிரிப்புதான் போங்க!

பொறவு காதர் சாகிபு காக்கா காதுல சைதி போயி தண்ணிப்பாக்கெட்டு கொண்டு வந்தார்.

''டே நம வச்சிருந்த பிர்னிய யாரோ எடுத்துட்டானுவ' '- நான்.

நல்லா தேடு! டேய் அல்தாப் மருவாதையா சொல்லிடு நீதேனெ எடுத்தே!

இன்ட்ட ஏன்டா கேக்குற, ?????! (கெட்ட வார்த்தை)

டேய் ????? (கெட்ட வார்த்தை) அது ,இதுன அப்ப நடக்குறது வேர!- நான் .

இன்னாடா செய்வ? - அல்தாப்.

டே உடுங்கட சண்டய" இஸ்மாயில் சகன்ல ரெண்டு பிர்னி இருக்குது பாரு அவனுவதான் எடுத்து இருப்பானுவ" - குஞ்சி சொல்லிகிட்டு இருக்கும் போது யாரொ என் முதுகுள இறச்சி முள்ளால அடுச்சானுவ "யார்ரா ??????? (கெட்ட வார்த்தை) நான் எழுந்ததும் - மருபடியும் ஒரு எறச்சி முள் என் விலாவுல உலுந்தது.

எனக்கு கெட்ட கோபம் யார்ரா---ப் பையன்?

தம்பி சும்ம உடுங்க நீங்க நாணய கார உட்டுப்புள்ள நீங்கலெ இப்படி அசிங்கமா பேசலாமா? - புகாரி காக்கா.

அப்படி சொல்லிவிட்டு அவரு சொன்னார். எந்த ?????? வோ (கெட்ட வார்த்தை) இப்படிதான் நடந்துக்கானுவ .ஏன் காக்கா திட்ரிய-- நான். '

பின்னெ என்ன தம்பி எந்த பொரம்போக்கோ எம்மேல முள்ள வுட்டு அடிகிரானுவ திட்டாம கொஞ்ச சொல்ரியலா?

என்னடா உலகம் தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?(மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்..)

மாப்ள நீ நானயக்கார வூட்டுப்புள்ளன்னா நாங்கள் எல்லாம் அநியாய ஊட்டுப்புள்ளயா? - யூசுப் .

நான் என்ன பதில் சொல்ல? (பொறவு காதர் சாயிபு காக்கா வர பிர்னி பிரச்சனையும் தீர்ந்தது).

தீடிரென்டு, யார்ரா எம்மேல தண்ணி பாச்சுனது - காதர் சாயிபு காக்கா.

(பெரும் ரகல பசங்க சாப்ட்டுட்டு வெளியில ஓடராங்க! எல்லாரிடமும் அவசரம் 3 மணிக்கு இந்தியா,சிரிலங்கா கிரிக்கெட் மேட்ச் டி.வியில) .

-- தஸ்தகீர்
CROWN

No comments:

Post a Comment