Monday, January 31, 2011

மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா?பட்டிமன்றகேடுகெட்ட செயல்கள் ?

சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?
நவம்பர் 26, 2010 சிராஜ் அப்துல்லாஹ் ஆல்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?



அன்புச் சகோதரர்களே!

முதல் முறையாக தனிப்பட்ட மனிதருடைய பெயரை முன்மொழிந்து பதில் பதிக்கிறேன் எந்தவொரு தனிப்பட்ட நபரின் அனுமதியுமின்றி அவரது பெயரால் பதில் கொடுப்பது என்னைப் பொருத்தவறையில் தவறுதான் எனினும் இன்று சில முட்டாள் முல்லாக்கள் மார்க்கத்தை கேளிக்குறியதாக ஆக்கி மார்க்க அறிஞரான சாகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாம் எனவேதான் சமூகத்தில் இதுபோன்ற கேடுகெட்ட செயல்கள் தொடரக்கூடாது என்று கருதி அந்த தனிப்பட்ட சகோதரர் என்னுடைய செயலை மன்னிப்பார் என்று கருதிக்கொண்டு அவருடைய பெயரை முன்மொழிந்து கருத்து பதிக்கிறேன்! என்னில் தவறு இருப்பின் அனைவரும் மன்னிக்கவும்! அல்லாஹ் கிருபை செய்வானாக!



இங்கு சகோதரர் பி.ஜே அவர்களின் பெயர் அடிபடுவதால் அந்த பெயரை வைத்தே பதில் கூறுகிறேன் இதை வைத்துக்கொண்டு அண்ணன் பி.ஜேவுக்கு வக்காளத்து வாங்குகிறாயா? என்று உங்களில் கேள்வி எழுப்பினால் எழுப்புங்கள் நான் கீழ்கண்ட நபிமொழிக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் என்னை கைவிடமாட்டான், மஹ்ஷரில் கைவிடக்கூடாது என்று உணர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறேன் ஏனெனில் நான் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க விரும்புகிறேன்! நீங்களும் இதுபோன்று வாழ விரும்பினால் வாருங்கள்!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2442)





பி.ஜே என்ன அல்லாஹ்வா? இதன் பதில் இறுதியில் இருக்கும் தயவு செய்து அறைகுறையாக படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்! முழுவதுமாக படிக்கவும்!



இஸ்லாத்தில் சிறந்தது எது?


இஸ்லாம் என்பதே சிறந்ததுதான் அதிலும் சிறந்த செயல் என்ன என்று கேட்டால் ஸலாம் என்ற முகமன்தான். நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் இஸ்லாதை பற்றி வினவுகிறார் அந்த நேரத்தில் மாநபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா? இதோ ஆதாரம்


‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)



யாருக்கு ஸலாம் கூறவேண்டும்

நம்மில் பெரும்பாலானோர் யாருக்கு ஸலாம் கூறவேண்டும் என்ற கருத்துவேறுபாடுகளிலேயே காலத்தை கழிக்கிறார்கள் இவர்கள் கீழ்கண்ட அருள்மறைவசனத்தில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை உணர்ந்துவிட்டால் அவர்களின் விவாத நேரம் மிச்சமாகும்!



(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:86)




இங்கு அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தை எவராலும் என்று வருகிறது அதாவது ஒரு காஃபிர் கூட உங்களுக்கு ஸலாம் கூறினால் நீங்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறலாம் இதுதான் இங்கு நாம் அறியும் செய்தி எனவே ஒரு காஃபிர் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்கு பதில் அளித்தால் உங்களுக்கு என்ன கேடு வந்துவிடும்! சிந்தித்துப்பாருங்கள் நீங்களாக காஃபிர்களை தேடிச்சென்று ஸலாம் கூறவில்லையே மாறாக காஃபிர்கள் உங்களைத் தேடி வந்து அன்பாக ஸலாம் கூறுகிறார்கள் அவர்களை வாழ்த்தவது கூடாதா?



யாருக்கு ஸலாம் கூறக்கூடாது

ஸலாம் என்ற முகமன் வாழ்த்தை யாருக்கு கூறக்கூடாது என்று நானறிந்தவரை எந்த வரைமுறையும் தென்படவில்லை தென்பட்டால் கூறவும்! ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைப்படி பார்த்தால் சிலருக்கு வேண்டுமானால் ஸலாம் கூறுவதை தவிர்க்கலாம். யாராவது நமக்கு அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் நேரட்டும்) என்று பாலஸ்தீனத்தில் கலகம் விளைவிக்கும் யூத நாய்ககளின் ஸ்டைலில் முகமன் கூறினால் பதிலுக்கு மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த நபியின் ஸ்டைலில் வ அலைக்க என்று கூறலாம்!



இதன் மூலம் நாம் அறிவது ஸலாம் என்ற வார்த்தையை மழித்துவிட்டு அஸ்ஸாமு அலைக்க என்று கூறுபவனுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதே! ஆதாரம் இதோ


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்’ என்றார்கள். (புகாரி 6926)




யாருக்காவது ஸலாம் கூறுவதை புறக்கணித்தால் என்ன நிகழும்

வேண்டுமென்றே ஸலாத்தை புறக்கணித்தால் அவன் வேண்டுமென்றே நபிவழியை புறக்கணிக்கிறான் அவ்வாறு புறக்கணிப்பவன் அல்லாஹ்வை இகழ்கிறான் ஏனெனில் அல்லாஹ்தான் ஸலாம் என்ற முகமனை கற்றுத்தந்தவன்!



ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவரோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சபையில் அமர்ந்திருந்தால் இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்



நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244



ஒருவேளை சகோதரர் பி.ஜே அல்லது ஜமாலி ஆகிய இருவருமோ? அல்லது இருவரில் ஒருவரோ ஒரு சாலையோரம் நடந்து சென்றாலோ? அல்லது சாலையோரம் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தாலோ இந்த இருவருக்குமோ? அல்லது இருவரில் ஒருவருக்கோ எந்த மடையனாவது திட்டம்போட்டு ஸலாம் கூறவில்லை அல்லது ஸலாமுக்கு பதில் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட நிலையில் அந்த மடையர்கள் கீழ்கண்ட நபிவழியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்



சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231



ஒருவேளை ஸலாம் கூற மறுக்கும் மடையர்கள் தங்கள் வாதத்தில் நிலைத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழியை மறுப்பது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் சிறந்ததை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்!


‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)




சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ் ஆக்க சதித்திட்டமா?


அன்புச்சகோதர, சகோதரிகளே நாம் ஒருவருக்கு ஸலாம் கூறக்கூடாது என்று தீர்மானம் எடுத்தால் அந்த ஒருவரை நாம் அல்லாஹ்வாக கருதுகிறோம் என்றுதான் பொருள்படுகிறது. குழப்பமாக உள்ளதா? இதோ கீழ்கண்ட நபிமொழியை பாருங்கள்!



அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 835)



இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத சில உலமாக்கள் பிஜேவுக்கு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா என்று பாட்டிமன்றம் நடத்துகிறார்களாமே அவர்கள் சகோதரர் பி.ஜே அவர்களை அல்லாஹ்வாக ஆக்கிவிட சதித்திட்டம் போடுகிறார்களா? மூட முல்லாக்களே இதுதான் உங்கள் தேடுதலா? இப்படிப்படட விவாதங்களின் மூலம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்குமா? ஒரு தஃவா சகோதரரை குறிப்பிட்டு ஸலாம் கூறலாமா? கூறக்கூடாதா? என்று விவாதம் நடத்தும் நீங்கள் எல்லாம் உலமாக்கள் ஆலிம்கள் அல்ல மாறாக அறிவிழிகள்!



ஆலிம்கள் என்பவர்கள் நபியின் வாரிசுகள் என்று கேள்விப்பட்ட துண்டு எந்த நபியாவது இந்த கேடுகெட்ட செயலை செய்தாரா? அப்படியெனில் இந்த மூட ஆலிம்கள் தங்களை நபியின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நபிமார்களை கேவலப்படுத்து கிறார்களா? இப்படித்தான் நாமும் கேள்வி எழுப்புவோம்! எனவே இந்த சம்பவத்தின் மூலம் எந்த ஆலிம், உலமாக்கள் சகோதரர் பி.ஜேவுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கூறுகிறானோ அந்த ஆலிம் ஆலிமே அல்ல அந்த தகுதியை அவன் இழந்துவிட்டான் அவன் அல்லாஹ்வின் பார்வையில் பொதிசுமக்கும் கழுதைதான் ஆதாரம் இதோ



எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்அன் 62:5)



இந்த வசனம் தவ்ராத்திற்கு மட்டுமல்ல குர்ஆனுக்கும் தான் ஏனெனில் தவ்ராத்தும் குர்ஆனும் அல்லாஹ்வுடைய வேதம் தானே! இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் இந்த மூட முல்லாக்களை பொதி சுமக்கும் கழுதைகள் என்று ஃபத்வா கொடுக்க முன்வரவேண்டும்!



சகோதர, சகோதரிகளே இறுதி வேண்டுகோள்

எந்த தனிமனிதனுக்காவது, மார்க்க அறிஞருக்காவது, முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாக வாழ்ந்து வரும் மனிதனுக்காவது ஸலாம் கூறமாட்டேன் என்று எவராவது உறுதிமொழி எடுத்திருந்தால் உடனே அந்த உறுதிமொழியை கழிவுகள் நிறைந்த குப்பையில் தூக்கி போட்டுவிட்டு கீழ்கண்ட நபிமொழி்க்கு தலைசாய்க்கவும்!


நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது, ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு ”உங்களிடையே ஸலாமை பரப்புங்கள் என்றார்கள். (நூல் முஸ்லிம் 81)


ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் பி.ஜே என்ற இந்த முஸ்லிம் சகோதரருக்கு நேர்ந்த துன்பத்தை, இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிர்த்து குரள் எழுப்பக்கூடிய முஸ்லிம் சகோதரன் உங்களில் யார்? நீங்கள் மஹ்ஷரில் நீதிமான்களுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் அப்படிப்பட்ட அந்த அர்ஷின் நிழலில் நீங்கள் நிற்க தகுதியானவராக மாற விரும்பினால் வேற்றுமைகளை மறந்து நீதி செலுத்துங்கள்!

அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment