Monday, January 10, 2011

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

நீங்களும்பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும்உங்களுக்காக...





பேஸ்புக் எவ்வளவுசுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர்டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.





இதில் சில படங்களையோ அல்லதுதகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லதுஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக்கூடியது.





'data mining'எனப்படும்கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல்ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசிஇலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் .



இது குற்றவாளிகளுக்குக்கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்துவிடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.





பிறந்ததிகதியும் இடமும் :-



இது உங்கள் அடையாளங்கள்திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லைமீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒருகுற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்படஎதைவேண்டுமானாலும் செய்யலாம்.





தாயின்கன்னிப் பெயர் :-



பல இணையத்தளங்கள் உங்களதுதாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள்கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டுபயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.





விலாசம் :-



நீங்கள் எங்கேவசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள்உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாளமோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின்தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.





விடுமுறைகள்:-



உங்களது விடுமுறைத் திட்ங்களைநீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள்வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.





வீட்டிலிருந்துபுறப்படும் குறுகிய பயணங்கள் :-



இதுவும் நீங்கள் பின்தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாகநீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடுஉணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இதுஉங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின்மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும்அண்மையில் பதிவாகியுள்ளது.





முறையற்றபடங்கள் :-



பேஸ்புக்கை பலரும்பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒருஎண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக்காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடியபடங்களையும் போட வேண்டாம்.





ஒப்புதல்கள்:-



இதுவும் உங்களை வேலையிழக்கச்செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன்வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக்கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமேஉங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.





தொலைபேசிஇலக்கம் :-



உங்களோடு அவசியம்தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'datamining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்குவழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது"Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும்பாவிக்க வேண்டாம்.





பிள்ளைகளின்பெயர்கள் :-



இதுவும் அடையாளத்திருடர்களால்அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒருபிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.





பொதுவானமுழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-



பேஸ்புக்கில் இத்தகையவிவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரைமட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.



ஈமானுக்குசோதனையான காலம் இது.

விபச்சாரத்தின் அழைப்புவீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்)மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க

மார்க்கத்தைபின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளைநரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராகசாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும்இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம்அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தரவிரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)



2:152. ஆகவே,நீங்கள்என்னை நினைவு கூறுங்கள்;நானும்உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள்எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்குமாறு செய்யாதீர்கள்



நன்றி

No comments:

Post a Comment